பொள்ளாச்சி, ஏப். 1- விவசாயிகளின் வேளாண் விளைப்பொருட்கள் பாதுகாக்க குளிர்சாதனக் கிடங்கு அமைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பரப்புரையின் போது பொள்ளாச்சி மக்களவை தொகுதி திமுக வேட் பாளர் கே.ஈஸ்வரசாமி உறுதி அளித் தார். கோவை மாவட்டம் கிணத்துக்க டவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடாங்கிபாளையம், இம்மிடிப்பா ளையம், லட்சுமி நகர், கிணத்துக்க டவு, பகவதிபாளையம், கல்லங் காட்டு புதூர் உள்ளிட்ட பகுதியில் பொள்ளாச்சி மக்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஐந்து நாட்களாக தேர்தல் பரப்புரையின் போது பொதுமக்க ளிடம் மிகுந்த வரவேற்று கிடைத்துள் ளது. குறிப்பாக பெண்கள் உற்சாக வரவேற்பு தருகின்றனர். கிணத்துக்க டவு சுற்றுவட்டப் பகுதியில் விவசா யம் சார்ந்த பகுதியாகும். இங்கு வேளாண் விளைப்பொருட்கள் பாதுகாக்க குளிர்சாதனக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்ப டும். இப்பகுதி குடிநீர் பற்றாக்குறை போக்க கூட்டு குடிநீர் திட்டத்தை முறைப்படுத்தி அனைத்து கிராமங்க ளுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தப் படும். மேலும், தமிழகம் முதல்வர் 1.15 கோடி குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறார். இதில் கிடைக் காத தகுதி உள்ளவர்கள் அனைவ ருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி யளித்தார். இதில் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகே சன் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் ஜெயராமகிருஷ்ணன் ஒன்றியச் செயலாளர் செந்தில் மாவட்ட கவுன் சிலர் ராஜா , நடராஜன் கிணத்துக்க டவு தேர்தல் பொறுப்பாளர் பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். உடுமலை இதேபோன்று, உடுமலைப்ப குதியில் வாக்கு சேகரித்து திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி பேசுகை யில், நூறு நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்க ஒன்றிய மோடி அரசு முயற்சிக்கிறது. கடந்த நான்கு மாதங் களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. ஊதியத்தை நிலுவையில் லாமல் வழங்கவும், நூறு நாள் வேலை திட்டத்தை 150 நாட்கள் அதிகபடுத்தி சம்பளமும் அதிகபடுத்த முயற்சி கள் எடுக்கப்படும். கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டை போர் கால அடிப்படையில் சரி செய்யப் பட்டு அனைவருக்கும் சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்தார். இந்த பிரச்சாரத்தில் இந்தியா கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திராளன பொதுமக்கள் கலந்து கொண்டனர்.