கோவை மாவட்டம், பொள்ளாச்சி - உடுமலை சாலையில் உள்ள நாச்சிமுத்து கவுண்டர் பாலிடெக்னிக் மாணவ, மாணவிகளுக்கு வாக்கு அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேர்தல் ஆணையம் அறிவித்த தேசியக்கொடி வண்ணத்தில் தொப்பிகள் அனிந்து சார் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான கேத்தீரின் சரண்யா தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். இதில் பொள்ளாச்சி தாலுகா வட்டாட்சியர் ஜெயசித்ரா, ரேணுகாதேவி, தேர்தல் அலுவலர் சரவணன் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.