districts

அரசு கட்டடத்தில் அரசியல் கட்சியின் வண்ணத்தில் கல்வெட்டு

பென்னாகரம், ஜூன் 26- அரசு நிதி ஒதுக்கீடு செய்து கட்டப் பட்ட கட்டடத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வண்ணத்தில் கல்வெட்டு அமைத்த செயல் அரசியல் விமர்சகர் களின் கண்டனத்திற்கு உள்ளாக்கி யுள்ளது.  பென்னாகரம் ஒன்றியம், மாதேஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட மாதே அள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளா கத்தில் ஊரக வேலை உறுதித்திட் டத்தின் கீழ் அரசு நிதி  11.97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கட்டடம் பணி நிறை வடைந்த நிலையில், கட்டடத்தின் திட் டப்பணி விவரங்கள் அடங்கிய கல் வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு அரசின் கோபுர இலச்சினை பொறிக்கப்பட்டு பணி விவரம் திட்ட  மதிப்பீடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள் ளது. அதில் மாதேஅள்ளி ஊராட்சி  மன்றத் தலைவர் கோவிந்தசாமி மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமு பெயர் ஆகியோர் பெயர் பாட்டாளி மக்கள் கட்சியைக்குறிக்கும் வகையில் மூன்று வண்ணங்களில் பொறிக்கப் பட்டுள்ளது.  அரசு நிதியில் பள்ளிவளாகத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்ட டத்தில் அரசியல் கட்சியைக் குறிக்கும்  வகையில் கல்வெட்டில் பெயர்களைப் பொறித்திருபபதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும், தான் சார்ந்த கட்சியின் மன்ற உறுப்பினர்கள் பெயரை மட்டும் கல் வெட்டில் பொறித்து விட்டு, மற்ற உறுப் பினர்களின் பெயரைக் குறிப்பிடாமல் அரசியல் செய்யும் ஊராட்சி மன்றத் தலைவரின் செயல் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.