districts

img

திருப்பூர்: 1154 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

திருப்பூர், பிப்.27- திருப்பூர் மாவட்டத்தில் 1127 மையங்கள் மற்றும் 27 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 1154 இடங்களில் ஞாயிறன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 21  ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டு உள்ளது. அதன்படி இம்முகாமில் 4  ஆயிரத்து 666 பணியாளா்கள் சொட்டு  மருந்து வழங்கும் பணியை மேற்கொண்ட னர்.  இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாநக ராட்சியில் ஆணையர் கிராந்திக்குமார் பாடி, சந்திரகாவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.  பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உட் பட்ட குழந்தைகளுக்கு இது வரை எத்தனை  முறை போலியோ சொட்டு மருந்து வழங்கி  இருந்தாலும், இம்முகாமிலும் பங்கேற்று  தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. அதன்படி பல பகுதிகளிலும் தாய் மார்கள் தங்கள் குழந்தைகளை முகாம்க ளுக்கு அழைத்து வந்து ஆர்வமுடன் சொட்டு  மருந்து செலுத்திக் கொண்டனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள் ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்களிலும் இம்முகாம் நடைபெற்றது. முன்னதாக திருப்பூர் மாவட்டம் காங்க யம் தாலுகா சாவடிபாளையம் அரசு ஆரம்ப  சுகாரார நிலையத்தில் போலியோசொட்டு மருந்து முகாமினை மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத், சுகாதாரப் பணிகள் துணை இயக்கு நர் மருத்துவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.