districts

img

போலியோ சொட்டு மருந்து முகாம்

திருப்பூர், பிப்.28- திருப்பூர் மாவட்டத்தில் ஞாயிறன்று நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் ஒரு லட் சத்து 90 ஆயிரத்து 990  குழந்தைகளுக்கு போலியோ  சொட்டு மருந்து கொடுக் கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1127 மையங்கள் மற்றும் 27 நட மாடும் குழுக்கள் என மொத்தம் 1154 இடங்களில் ஞாயி றன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. அதன்படி இம்முகாமில் 4 ஆயிரத்து 666 பணியாளா்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியை மேற்கொண்டனர்.  இந்நிலையில், இந்த முகாமின் மூலம் திருப்பூர் மாவட் டத்தில் 2 லட்சத்து 21 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 600 குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி இலக்கில்  96.20 சதவிகிதம் அளவுக்கு இலக்கு நிறைவேற்றப்பட்டுள்ள தாக மாவட்ட ஆட்சியராக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.