சின்னாளபட்டி, மே 12- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பழைய சிலுக்குவார்பட்டி வடக்கு தெரு பகுதியில் வசித்து வரும் அரசியல் பிரமுகர் குடும்பத்திற்கும் எதிர்வீட்டில் வசித்து வரும் இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் போக்கு வரத்துக்கழக ஊழியர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று அரசு ஊழி யர்களான அண்ணன் தம்பிகளுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளன. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கள் வீட்டின் எதிரே உள்ள சாலை வரை தங்களின் பட்டா இடம் உள்ளது எனக் கூறி அளவு கற்களை சாலையில் ஊன்றி ஆக்கிரமிப்பு செய்து பொது மக்களின் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தி னர். இதனால் அப்பகுதி மக்கள் அவசர தேவை களுக்கோ உடல்நிலை சரியில்லாதவர்களை வாகனங்களில் கொண்டு செல்ல மிகவும் சிறம்மப்பட்டு வந்தனர். இதுகுறித்து கடந்த 3 ஆண்டுகளாக வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தால் பிரச்சனை தீராததால் நீதிமன்றம் வரை சென்றனர். இந்நிலையில் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் திடீரென அளவு கல்லை சாலையில் ஊன்றி மேலும் பிரச்சனையில் ஈடுபட்டனர் .இதுகுறித்து ஊர் பொதுமக்கள் சார்பில் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல் சார்பு ஆய்வா ளர்கள் பாலமுத்தையா,தயாநிதி தலைமை யிலான காவல்துறையினர் சென்றனர். கிராம நிர்வாக அலுவலர் நவாஸ்கான் முன்னிலை யில் இரவோடு இரவாக பொது மக்களுக்கு இடையூறாக இருந்த சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றினர் மேலும் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மின் கம்பத்தை தெரு ஓரமாக ஊன்றுவதற்கு மின்சார வாரிய பொறியாளரை அழைத்து பேசி உடனடியாக மின் கம்பத்தை சாலையின் ஓரமாக நடவும் ஏற்பாடு செய்தனர். இந்த நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.