கோவை, ஜூன் 29- காவலர்களுக்கு மஞ்சப் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை காவல்துறை ஆணையாளர் துவக்கி வைத்தார். நெகிழி பை உபயோகத்தை குறைக்க வலியுறுத்தி, கோவை மாநகர காவல் துறை சார்பில், அவிநாசி சாலையில் உள்ள மாநகர பி.ஆர்.எஸ் வளாகத்தில் தானியங்கி மஞ் சப்பை வழங்கும் இயந்திரத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சனி யன்று திறந்து வைத்தார். அப்போது காவ லர்களுக்கான மலிவு விலை அங்காடிக்கு வந்த காவலர்கள் மற்றும் அவர்களது குடும் பத்தினர் இயந்திரத்தில் ரூ. 10 ரூபாய் காயின் செலுத்தி மஞ்சப் பையை பெற்றனர். தொடர்ந்து, குடிநீர் சுத்திகரிப்பு இயந்தி ரத்தையும் ஆணையர் திறந்து வைத்தார். இதில், கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார், ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் மற்றும் காவலர் கள், காவலர் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.