districts

img

கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பு

கோவை, மே 23- வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிரா மம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 227 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச் சித் திட்டத்தை தமிழக முதல்வர் சென்னை தலைமைச் செயலகத்தி லிருந்து தொடங்கி வைத்தார். இதனையொட்டி, கோவையில்  எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட் பட்ட கொண்டையம்பாளையம், ஆசியன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இத்திட்ட துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை தாங்கி னார். வேளாண்துறை இணை இயக்குநர் இரா.சித்ராதேவி வர வேற்புரையாற்றினார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வாழ்த்துரை வழங்கி னார். இந்நிகழ்வில், வேளாண் துறை சார்ந்த பயனாளிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது. முன்னதாக, கொண்டையம் பாளையம் பகுதியில் உள்ள குளத்தை தூர் வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீ ரன், பி.ஆர்.நடராஜன் எம்.பி., துவக்கி வைத்தனர். இந்நிகழ் வில் திரளானோர் பங்கேற்றனர்.

சேலம்

சேலம் அயோத்தியாப்பட்ட ணத்தில் நடைபெற்ற நிகழ்வில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார் மேகம் கலந்துகொண்டு 13 பயனா ளிகளுக்கு மானியத்துடன் கூடிய இடுபொருட்கள் வழங்கினார். தொடர்ந்து 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவி தொகையை மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேகலா தேவேந்திரன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வம் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வீராணம் ஊராட்சியில் நடை பெற்ற நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி ஆறுமு கம், துணைத்தலைவர் கோபால் ஆகியயோர் பங்கேற்று விவசாயி களுக்கு திட்டம் குறித்து எடுத்து ரைத்தனர். இதில் வார்டு கவுன்சி லர்கள் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 60 கிராம பஞ்சாயத்துகளில் இவ் விழா நடைபெற்றது. விழாவில் இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெ டுக்கப்பட்ட 60 கிராம பஞ்சாயத்து களில் 13,724 பயனாளிகளுக்கு ரூ.35,59,354 மதிப்புள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ் ணனுண்ணி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், குமாரவலசு ஊராட்சி, அண்ணமார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார் பில் நெட்டை தென்னங்கன்றுகள், வயல் வரப்புகளில் பயறு சாகு படி செய்ய பயறு வகை விதைகள், கைத்தெளிப்பான் மற்றும் விசைத் தெளிப்பான், தோட்டக்கலைத் துறை சார்பில் வீட்டுத்தோட்டம் அமைக்க தளைகள், நெகிழிக் கூடை, வேளாண்மை பொறியி யல் துறை சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்க பணி ஆணை என மொத்தம் 233  விவசாயிக ளுக்கு ரூ.6,43,679 மதிப்பீட்டி லான அரசு நலத்திட்ட உதவி களை வழங்கினார்.