districts

img

நோ பார்க்கிங்கில் நின்ற தனியார் பேருந்து அபராதம் விதித்து போலீசார் அதிரடி

கோவை, ஜூன் 20- நோ பார்க்கிங்கில் நிறுத்திய தனியார் பேருந் திற்கு போக்குவரத்து காவல் துறையினர் பூட்டு போட்டு 2000 ரூபாய் அப ராதம் விதித்தனர். கோவையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையம் வழியாக புறநகர் மற்றும் மாநகர பேருந்துகள் ஏராள மாக வந்து செல்கின்றன. குறிப்பாக, இங்கு மாவட்ட ஆட்சியர்  அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், மாந கர காவல் ஆணையர் அலுவலகம், நீதிமன்றம் என அருக ருகே உள்ள நிலையில், காந்திபுரம் மற்றும் அவினாசி சாலை  வழியாக செல்லும் வாகனங்கள் அதிக அளவில் வந்து  செல்லும். இதனால் ரயில்நிலையத்தையொட்டிய சாலையில்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.  இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து  வரும் பேருந்துகள் மற்றும் 11 எண் கொண்ட பேருந்துக ளின் கடைசி நிறுத்தம் ரயில் நிலையமாக உள்ளது. ரயில்  நிலையம் அருகே போதிய இடவசதி இல்லாமலும் குறுகிய  சாலையாக இப்பகுதி உள்ள நிலையில் இங்கு வரும் வாக னங்கள் நடுவழியில் வாகனங்களை நிறுத்துவதால் பெரும் பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கால் டாக்சி, ஆட்டோ ஸ்டேண்ட், பேருந்துகள் ஒரே இடத் தில் நிற்பதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். போக்குவரத்தை  சீர் செய்ய காவலர்கள் முயன்றாலும் இதற்கான நிரந்தர தீர்வு  இதுவரை எட்டப்படவில்லை.  இந்நிலையில், வியாழனன்று ரயில் நிலையம் அருகே  தடம் எண் 11 தனியார் பேருந்து ரயில் நிலைய பேருந்து நிறுத் தம் நோ பார்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக் கப்பட்டிருந்தது. இதன் காரணமாக  போக்குவரத்து நெரிசல்  ஏற்பட அங்கு வந்த போக்குவரத்து போலீசார் பேருத்திற்கு  பூட்டு போட்டனர். பின்னர், அந்த தனியார் பேருந்திற்கு 2000  ரூபாய் அபராதம் விதித்தனர். போக்குவரத்திற்கு இடையூறு  ஏற்படுத்தும் வகையில் யார் செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.