உதகை, மே 13- இந்திய நாட்டின் துணை குடி யரசு தலைவர் வெங்கையா நாயுடு உதகை வருவதையொட்டி, வியாழ னன்று காவல் துறையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரி யில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்திய நாட்டின் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்து கொள் கின்றனர். இதற்காக வெங்கையா நாயுடு, சனியன்று (இன்று) தில்லியில் இருந்து கோவைக்கு விமானம் வரு கிறார். இதைத்தொடர்ந்து மே 15 ஆம் தேதியன்று கோவையிலிருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு வருகிறார். இதன் பின் அங்கு காலை 11 மணியளவில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். இதைத்தொ டர்ந்து உதகை லாரன்ஸ் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். முன்னதாக, குன்னூரிலிருந்து மற் றொரு ராணுவ ஹெலிகாப்டரில் உத கையில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப் டர் தளத்துக்கு செல்லும் அவர், அங் கிருந்து கார் மூலம் ராஜ்பவனுக்கு செல்கிறார். தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து சாலை மார்க்கமாக துணை குடியரசு தலைவர் உதகை ராஜ்பவன் செல்வதையொட்டி, வியா ழனன்று காவல் துறையினர் பாது காப்பு வாகன ஒத்திகையில் ஈடுபட்ட னர். உதகை தீட்டுக்கல் மைதானத் திலிருந்து படகு இல்ல சந்திப்பு மற்றும் ஆட்சியர் அலுவலக சாலை வழியாக 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒத்தி கையில் ஈடுபட்டன. இதனால், மற்ற சாலைகளில் பொதுமக்களின் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. இதே போல் வெங்கையா நாயுடுவின் வரு கையையொட்டி 600க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.