districts

img

தாராபுரம்: அரசு பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

தாராபுரம், மார்ச் 15- தாராபுரம் அருகே உள்ள  தாசர்பட்டி அரசு பள்ளி ஆசிரி யர் போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டு சிறை யிலடைக்கப்பட்டார். தாராபுரம் அடுத்துள்ள தாசர்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் ஏராள மான மாணவர்கள் பயின்று  வருகின்றனர். இப்பள்ளி யில் உடுமலைப்பேட்டை காந்திநகரை சேர்ந்த முத்துப்பாண்டி என் பவரது மகன் மணிகண்டராஜ் (42), சமுக அறிவியல் பாடப்பிரிவு ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இவர், அப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று  வரும் மாணவிக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்த தாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந் தபட்ட மாணவி தலைமையா சிரியையிடம் புகார் தெரிவித் ததை தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலரின் அறிவு றுத்தலின் பேரில் தலைமை யாசிரியர் வித்யா தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித் தார்.  அப்புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் மணிகண்ட ராஜை கைது செய்து விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் ஆசிரியர் மணிகண்டராஜ் மாணவிக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் துன்புறுத்தல் அளித்தது உறுதியானதை தொடர்ந்து, அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.