districts

img

தூய்மையான தாராபுரம் நகராட்சியாக மாற்ற உறுதிமொழி ஏற்பு

தாராபுரம், ஜூன் 7 - தாராபுரம் நகராட்சியை குப்பை யில்லா தூய்மையான நகராட்சியாக மாற்ற நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் பணியா ளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தாராபுரம் நகராட்சியை சுத்தமாக வைத்திருக்கவும், சுகாதாரத்தை பேணவும் அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விழிப் புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தாரா புரம் நகராட்சி ஆணையாளர் ராமர் தலைமை வகித்தார். பின்னர் நக ராட்சி தலைவர் பாப்பு கண்ணன் தூய்மை பணியாளர்களுடன் விழிப்பு ணர்வு பிரச்சாரத்தை பழைய காய்கறி மார்கெட் பகுதியில் தொடங்கி வைத் தார். அப்போது சுத்தமான, நீடித்த சுற் றுச்சூழலை உறுதி செய்யும் பொருட்டு பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் விதமாக நக ராட்சி சார்பில்  விழிப்புணர்வு துண்டு  பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த  நிகழ்ச்சியில் பழைய காய்கறி மார்க் கெட்  பகுதியில் உள்ள குப்பைகளை  துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் படுத்தினர். இதனைத்தொடர்ந்து துப் புரவு பணியாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது. இதில் ஒன்றிய குழு பெருந் தலைவர் எஸ்.வி .செந்தில்குமார், நகர  செயலாளர் கே.எஸ்.தனசேகர், வழக் கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கே.செல்வராஜ், நகராட்சி கவுன்சி லர்கள் கமலக்கண்ணன், ஸ்ரீ தரன், ராஜேந்திரன், ஹைடெக் அன்பழகன், முகமது யூசுப், முத்துலட்சுமி, உஷாணா பானு, சீனிவாசன், துரை  சந்திரசேகரன், துப்புரவு பணியா ளர்கள்,  பொதுமக்கள் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.