districts

img

பொது இடத்தில் குப்பை கொட்ட மாட்டேன் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தாராபுரம், ஜூலை 24- தாராபுரம் நகராட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது இடத்தில் குப்பை கொட்ட மாட்டேன் என பொதுமக்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  எனது நகரம் எனது பெருமை என்ற திட்டத்தின் கீழ், நக ராட்சி நிர்வாகம் சார்பில், தாராபுரம் 14 ஆவது வார்டு  சிவசக்தி காலனியில் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் தலைமையில் பொது இடங்களில் குப்பை கொட்ட மாட்டேன் பிறரையும் குப்பை கொட்ட அனு மதிக்கமாட்டேன் என்று பொதுமக்கள் உறுதிமொழியை ஏற்ற னர்.  தொடர்ந்து சிவசக்தி காலனி பார்க் பகுதியில் மரக்கன்று கள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆணையர் தர்மர், கவுன் சிலர் மொரட்டாண்டி, குடியிருப்பு நலச்சங்க தலைவர் மகா லிங்கம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், அருண்  பிரபாகரன் 14ஆவது வார்டு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.