திருப்பூர், டிச.29- மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள் நிறைந்திருக்கும் ஆத்துப்பா ளையம் பகுதியில் விளையாட்டு மைதா னாம் அமைத்து தரக்கோரி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளி யன்று சாலையில் கபடி விளையாடும் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். ஆத்துப்பாளையம் பகுதி மாநில, மாவட்ட அளவில் கபடி போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் நிறைந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் பல ஆண்டுகளாக விளை யாட்டு மைதானம் அமைத்து தரக் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், மண்டல அலுவலகத்திலும் மனு அளித் துள்ளனர். இதுதொடர்பாக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் சாலையில் கபடி விளையாடும் போராட்டம் நடத்தப்போவதாக அறி வித்திருந்தனர். அதன்படி வெள்ளி யன்று வாலிபர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றியம் ஆத்துப்பாளையம் கிளைச் செயலாளர் லோகேஸ் தலைமை யில் கபடி விளையாடும் போராட்டம் நடத்த முற்பட்டனர். அப்போது, மாநக ராட்சி மற்றும் காவல் துறையினர், கோரிக்கை விரைவில் நிறைவேற்ற நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்த னர். இதையடுத்து போராட்டம் தற்காலி கமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிகழ்வில், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அருள், மாவட்டச் செயலாளர் மணிகண்டன், முன்னாள் மாவட்டத் தலைவர் காளியப்பன், ஒன் றியத் தலைவர் ரேவந்த், ஒன்றியச் செய லாளர் சந்தோஷ், ஒன்றியக்குழு உறுப் பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட் பட விளையாட்டு வீரர்கள் 50க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.