உதகை, ஏப்.13- உதகை - மஞ்சூர் சாலையில் வனப் பகுதி நீரோடையில் நெகிழிக் கழிவு கள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தமிழக அரசு ஒருமுறை பயன்ப டுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதற்கு முன் னரே நீலகிரி மாவட்டத்தில் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக் கப்பட்டது. இதனால் நெகிழி பயன் பாடு குறைந்தது. ஆனால் முற்றிலும் ஒழியவில்லை. கொரோனா காரணமாக 2 ஆண்டுக ளாக நீலகிரி மாவட்ட சுற்றுலாத் தலங் கள் வெறிச்சோடி கிடந்தது. அதன் பின் னர் 2 ஆண்டுகளாக மீண்டும் நெகி ழிப் பயன்பாடு அதிகரித்து விட்டது. தற்போது கோடை சீசன் தொடங்கி விட்டதால் தினசரி உதகைக்கு அதிக மான சுற்றுலா பயணிகள் வந்து செல் கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் சாலை, கூடலூர் சாலை, மஞ்சூர் சாலை உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை யோரம் நெகிழிப் பொருட்களை வீசி விட்டு செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக் கப்படுகிறது. இந்நிலையில் உதகை - மஞ்சூர் சாலையில் லவ்டேல் பகுதியில் வனப்ப குதி நீரோடையில் நாப்கின் உள்பட நெகி ழிக் குப்பை குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் தண்ணீரில் மிதந்து வனப் பகுதிக்குள் செல்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உதகை சீசன் தற்போது தான் தொடங்கியுள்ளது. இப்போதே நெகி ழிக் கண்காணிப்பை தீவிரப்படுத்தி னால் நீலகிரி வனச்சூழலை பாதுகாக்க லாம். அதேபோல் லவ்டேல் பகுதி யில் வனப்பகுதி நீரோடையில் உள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சூழலி யலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.