பாரிஸ். நுண் பிளாஸ்ட்டிக் துகள்கள் வளிமண்டலத்தில் கீழ் அடுக்கான டிரோபோஸ்பியர் வழியாக வானம் வரை பயணம் செய்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. யு கே பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையில் ஒரு குழு அச்சம் தரும் இந்த உண்மையைக் கண்டு பிடித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் மலைப்பகுதிகளில் இருந்து இந்த நுண்துகள் பிளாஸ்டிக்குகள் 4500 கிலோமீட்டர் வரை பயணித்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 5 மில்லிமீட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக்கு களே நுண்துகள் பிளாஸ்ட்டிக்குகள் எனப்படு கின்றன. டுரோப்போஸ்பியர் அடுக்கிற்கு முந்தைய அடுக்கில் (pre troposphere) காணப்படும் வலிமை மிகுந்த காற்றே இத்துகள்களை அதிக உயரத்திற்கு இவற்றை இட்டுச்செல்கின்றன. வளிமண்ட லத்தின் இந்த அடுக்கில் பூமியின் ஈர்ப்புவிசை சரியான அளவில் காணப்படுவதில்லை. இதனால் நுண்துகள்கள் வேகமாக மேல் நோக்கிப் பயணம் செய்யமுடிகிறது. இதனால் இத்துகள்கள் பயணம் செய்யும் சூப்பர் ஹைவேயாக இந்த அடுக்கு மாறியுள்லது. காற்று மண்டலத்தில் மாசைக் குறைக்க உதவும் மழை இங்கு குறைவு. இதுவே இந்த அடுக்கில் மாசுக்கள் அதிக அளவு இருக்கக் காரணம்.
காற்றில் பயணம் செய்யும் இத்துகள்கள் வைரஸ் நோய் பரப்பும் தூதர்களாகின்றன. இவை மற்ற மாசுக்களையும் கவர்ந்திழுக்கின்றன. பிளாஸ்டிக்குகள் செல்லும் வரைபடம் (route map) உட்பட பல நவீன தொழில்நுட்பங்கள் இந்த ஆய்விற் காகப் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கா, கனடா, யு.கே., வட ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல் ஆகிய இடங்கள் இத்தகைய மாசுக்கள் அதிகம் காணப்படும் இடங்கள் என்பது ஆய்வில் மூலம் தெரிய வந்துள்ளது. கடல்கள் இத்தகையவற்றின் உறைவிடமாக உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இங்கு போய்ச்சேரும் இத்துகள்கள் கடல்நீரில் மிதந்து கொண்டிருக்கின்றன. இவை மற்ற வழிகள் மூலம் காற்றுமண்டலத்திற்குப் செல்கின்றன. இவ்வாறு பரவும் 5-20 மைக்ரோமீட்டர் வரை பரப்பளவு உள்ள பிளாஸ்ட்டிக் துகள்கள் சுவாசக்கோளாரு நோய்களுக்குக் காரண மாகின்றன.
பிளாஸ்டிக் பேக்கேஜ் களுக்காகப் பயன்படும் பாலி எதிலீனே வளிமண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நுண்துகள்களில் அதிகம் இருந்தன. மேற்கித்திய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்றவை கப்பல்களில் ஏற்றி அனுப்பும் கழிவுகள் கூட நமக்குத் தெரியாமல் பல வழிகளில் நமக்கே திரும்பிவருகின்றன. இந்த நூற்றாண்டின் அற்புதக் கண்டுபிடிப்பு என்று வர்ணிக்கப்படும் பிளாஸ்டிக்குகளை நட்பு ரீதியில் பயன்படுத்தத் தெரியாத மனிதன் உரு வாக்கும் கழிவுகள் இன்று அவனையே திருப்பித் தாக்குகின்றன. வினை விதைத்தவன் வினையையே அறுவடை செய்கிறான்.