districts

img

குடமுழுக்கிற்கு வாழ்த்து தெரிவித்து இஸ்லாமியர்கள் வைத்த பிளக்ஸ் பேனர்

அவிநாசி, நவ.29- அவிநாசி அருகே சேவூரில் இந்து கோவில் குடமுழுக் கிற்கு வாழ்த்து தெரிவித்து இஸ்லாமியர்ர்கள் பிளக்ஸ் பேனர் வைத்தனர்.  திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து சேவூரில் நூற் றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கின்றனர்.  அப்பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன், சித்தர் முத்துக்குமார சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா வருகின்ற டிசம் பர் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.  இதற்காக அப்பகுதியில்  வசிக்கும் இஸ்லாமியர்கள் குடமுழுக்கு விழா நிகழ்ச்சி நிரல் அடங்கிய பிளக்ஸ் பேனரில், திருக்கோயில் கும்பாபிஷே கம் இனிதே நடைபெற வாழ்த்தும் இஸ்லாமிய நண்பர்கள்  என்ற வாசகம் அடங்கிய பிளக்ஸ் பேனரை சேவூர் மையப் பகு தியான ரவுண்டானாவில் வைத்துள்ளனர்.  மத வேற்றுமை பேசும் வன்ம பிரச்சாரங்கள் அதிக ரித்து வரும் இந்த காலகட்டத்தில், இந்து கோயில் குடமுழுக்கு விழாவிற்கு இஸ்லாமியர்கள் வாழ்த்தி பேனர் வைத்தது அப்பகு தியில் மத வேற்றுமையை வேரறுத்து ஒற்றுமையை பறைசாற் றும் விதமாக அமைந்துள்ளது.