districts

img

முடிக்காத சாலை வேலையை செய்து முடிந்ததாக தகவல் பலகை வைப்பு!

திருப்பூர், பிப். 16 – திருப்பூர் அருகே முதலிபாளை யம் ஊராட்சி பாலாஜி நகரில் வேலை  முடிவடையாமல் சாலை வேலை  முடிவடைந்ததாக தகவல் பலகை  வைக்கப்பட்டுள்ளது. இது தொடர் பாக விசாரணை நடத்தி நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதலிபாளையம் பொன்னாபு ரம் கிளைச் செயலாளர் ஏ.செல்வன்  வியாழக்கிழமை திருப்பூர் ஊராட்சி  ஒன்றிய ஆணையருக்கு எழுதியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது: முதலிபாளையம் ஊராட்சி  பாலாஜி நகர் பகுதியில் சுமார் 150  குடும்பங்கள் கடந்த 15 ஆண்டுகளாக  குடியிருந்து வருகிறார்கள். இப்பகு தியில் ரோடு மற்றும் அடிப்படை வசதி களை செய்து கொடுக்க வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் பல முறை கிராமசபைக் கூட்டங் களில் மனுக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு எந்த பயனும் இல்லாததால் பாலாஜி நகர் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி,  மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் முதலிபா ளையம் ஊராட்சிமன்றத் தலைவரி டம் மனுக் கொடுக்கப்பட்டது. அதன்  பிறகு பாலாஜி நகருக்கு சாலை வசதி  செய்து தருவதாக கூறினர். பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2022 –  2023 இன்படி பாலாஜி நகர் மெயின்  ரோடு மற்றும் குறுக்கு இணைப்பு  சாலையில் மண் சாலை அமைத்து ஓரடுக்கு கப்பி சாலையாக மாற்று தல் (மெட்டல் ரோடு) என்ற திட்டத்தில்  கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி  ரூ.21 லட்சத்து 26 ஆயிரம் செலவில்  வேலை தொடங்கப்பட்டது.

முதல்  வேலையாக ரோட்டில் கலவை மண்  கொட்டப்பட்டு சமன் செய்துள்ளனர். இரண்டாவது முறையாக ஜல்லி கற் கள் கொட்டி சமன் செய்து இந்த சாலை பயன்பாட்டிற்கு வரும்  என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்த னர். ஆனால் இரண்டு மாதங்களாக ஜல்லி கற்கள் குவியலாக கொட்டப் பட்டு சாலை வேலை நடைபெற வில்லை. இதனால் பாலாஜி நகர் மக் கள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கி டையே கடந்த டிசம்பர் 19ஆம் தேதி  வேலை முடிவடைந்து விட்டது என்று  அங்கு தகவல் பலகை வைத்துள்ள னர்.  வேலையை முடிக்காமல் இது  போல் செய்திருப்பது பொது மக்க ளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே சாலை பணி ஒப்பந் தம் எடுத்தவர் பணத்தைப் பெற்றுக்  கொள்ள இது போல் செய்தாரா,  பணத்தைப் பெற்றுக் கொண்டு வேறு  இடத்தில் வேலை செய்கிறாரா என்ற  கேள்வி எழுகிறது. எனவே ஊராட்சி ஒன்றிய ஆணையர் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். இந்த  சாலை வேலையை முடித்து பாலாஜி நகர் பொது மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் செல்வன் வலியுறுத்தி இருக் கிறார்.