கோவை, டிச.13- காரமடை அருகே குண்டும், குழியு மான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக் கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். கோவை மாவட்டம், காரமடையை அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சி யில் ஆலாங்கொம்பு, எம்ஜிஆர் நகர், தென் திருப்பதி, தொட்டபாதி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத் தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியி ருப்புகள் உள்ளன. மேலும், இங்கு பள்ளி, மருத்துவமனை மற்றும் தொழிற் சாலைகள் அதிகளவில் உள்ளது. இத னால் எப்போதும் இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். ஆனால், தென் திருப்பதி 4 ரோடு பகுதியிலிருந்து ஆலாங் கொம்பு 3 ரோடு பகுதி வரை உள்ள சாலை கடந்த 3 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. ஆலாங்கொம்பு எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள சாலை யில் கழிவுநீர் செல்வதால், அந்த சாலை மேலும் சேதமாகியுள்ளது. இதனால் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனம், கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன.
இந்நிலையில், இச்சாலையில் செவ் வாயன்று காலை இருசக்கர வாகனத் தில் சென்ற ஒருவர், குண்டும், குழியு மான சாலையில் சிக்கி தடுமாறி கீழே விழுந்து விபத்துகுள்ளானார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல றிந்து சிறுமுகை காவல் உதவி ஆய்வா ளர் ராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் ராயப்பன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். ஆனால், பொதுமக்கள் மறி யலை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதைய டுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம், “காரமடை, பிள்ளுகடை பகுதியிலிருந்து, சிறுமுகை நீலிப்பா ளையம் பிரிவு வரை சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு உள்ளது. விரை வில் பணிகள் தொடங்கப்படும்” என்ற னர். ஆனாலும், பொதுமக்கள் மறியலை கைவிட மறுத்தனர். மேலும், உடனடி யாக சாலையை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி கள் சாலையை தற்காலிகமாக சரி செய்து தருவதாக உறுதியளித்தனர். இதன்பின் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.