தருமபுரி, பிப்.6- தருமபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித்தேர்வு செவ்வா யன்று நடைபெற்றது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 695 பேர் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு வெற்றி பெற்றனர். இதையடுத்து அவர்களுக்கான உடல் தகு தித்தேர்வு தருமபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டியிலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாயன்று நடை பெற்றது. முதற்கட்டமாக செவ்வாயன்று 400 நபர்களுக்கு உயரம், மார்பளவு மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நிகழ்வு நடைபெற்றது. சேலம் சரக காவல் துறை துணைத்தலைவர் உமா மேற்பார்வையில், தருமபுரி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணி யன், துணைக் கண்காணிப்பாளர்கள் ராமச்சந்திரன், சுவேதா மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.