கோவை, ஜூன் 19- கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணி யாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் திங்க ளன்று நடத்தப்பட்டது. ஜெம் மருத்துவமனை மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து, மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு திங்க ளன்று முழு உடல் பரிசோதனை முகாம் நடத்தியது. ஜெம் மருத்துவமனையில் நடைபெற்ற இம்முகாமை, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார், ஆணையர் மு.பிரதாப் ஆகி யோர் துவக்கி வைத்தனர். இந்த மருத்துவ முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு ஸ்கேன், எக்ஸ்-ரே, இருதய பரிசோதனை. கர்ப்பப்பை கோளாறுகள், கர்ப்பப்பை புற்று நோய்கள், ரத்தசிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், சர்க்கரை அளவு, மஞ்சள் காமாலை உட்பட முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தொடர்ந்து சுமார் 750 நபர்களுக்கு வரும் நாட்களில் முழு உடல் பரி சோதனை செய்யப்படுமென மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், ஜெம் மருத்துவமனை தலைவர் பழனி வேலு, துணைத்தலைவர் பிரவீன் ராஜ், மாநகராட்சி துணை ஆணையர் சிவக்குமார், சுகாதாரக்குழு மாரி செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.