சேலம், மே 10- தமிழ்நாடு மருந்து விற்பனை மற்றும் பிரதிநிதிகள் சங்கத்தின் அமைப்பு தினம் சேலத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மருந்து விற்பனை மற்றும் பிரதிநிதிகள் சங்கத்தின் 57 ஆவது ஆண்டு அமைப்பு தினம் மற்றும் அகில இந்திய சம்மேளனத்தின் வைர விழா ஆண்டு ஆகியவற்றை முன்னிட்டு, சங் கத்தின் சேலம் கிளையின் சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் புதனன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலை வர் ஏ.செந்தில் குமார் தலைமை ஏற் றார். சம்மேளன செயற்குழு உறுப்பினர் ஓ.எஸ்.திலீப் மேனன், அகில இந்திய சம்மேளன கொடியை ஏற்றிவைத்து, தோழர் வி.பி.சிந்தன் குறித்த வர லாற்றை ஓ.எஸ்.திலீப் மேனன் உரை யாற்றினார். தமிழ்நாடு மருந்து விற் பனை பிரதிநிதிகள் சங்கத்தின் கொடியை மாநிலச் செயலாளர் பிரதீப் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி னார். இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சௌந்தர ராமன், மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த், மாவட்ட பொருளாளர் பொன் மலை செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரபா கரன், விக்னேஸ்வரன், ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.