சேலம், பிப்.9- ஓமலூர் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஒன்றிய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து சேலம் நாடாளுமன்ற உறுப் பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனு அளித்தார். இதுதொடர்பாக அம்மனுவில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட் டம், ஓமலூர் – சேலம் -நாமக்கல் என்.எச்:7 திட்டம், சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக ஓமலூரில் இருந்து நாமக்கல் வரை நீண்டுள் ளது. எம்விஆர் என்ற நிறுவனம், ஒன்றிய அரசின் ஒப்பந்தம் மூலம், ஓமலூர் சுங்கச்சாவடி தும்பிப்பாடி யில் இருந்து நாமக்கல் வரை 180 கி.மீ முதல் 249 கி.மீ வரை நான்கு வழிச்சா லையை சுயேச்சையாக அமைத்துள் ளது. அதேபோல், தும்பிப்பாடியில் இருந்து குரங்குச்சாவடி வரையி லான 180 கி.மீ முதல் 249 கி.மீ வரை யிலான நான்கு வழிச்சாலை, ஒன்றிய அரசின் நிதியுதவியுடன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தின் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு, பொதுமக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்பட்டது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிர்ண யித்த விதிமுறைகளை மீறி, எம்விஆர் நிறுவனம் 180 கி.மீ. (தும்பிப்பாடி) முதல் 249 கி.மீ வரை, அரசு நிதியுதவி யுடன் நான்கு வழிச்சாலையில் 191 கி.மீ. தொலைவில் ஒரு சுங்கச்சாவ டியை சட்டவிரோதமாக நிறுவியுள் ளது. ஓமலூர் சுங்கச்சாவடி மற்றும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகள் இரண்டும் சட்டவிரோதமானவை என் றும், அவற்றை இடமாற்றம் செய்வ தாகவும் தில்லியில் நடைபெற்ற ஒன் றிய போக்குவரத்துத்துறை கூட்டத் தில் உறுதியளித்த போதிலும், இந்த அங்கீகாரமற்ற சுங்கச்சாவடி இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆறு மாதங்களுக்குள் சுங்கச்சாவ டியை நேரில் பார்வையிட்டு, அதை அகற்ற தேவையான நடவடிக்கை களை எடுப்பதாக நெடுஞ்சாலைத் துறை இயக்குநர் உறுதி அளித்திருந் தார். நான்கு வழிச்சாலையைப் பயன் படுத்துவதன் அடிப்படையில் வாக னப் பயனாளர்களிடம் கட்டணம் வசூ லிக்க முதலில் உருவாக்கப்பட்ட சுங் கச்சாவடி அமைப்பு, பொதுமக்கள் மீது கணிசமான சுமையை ஏற்படுத்தி யுள்ளது. ஓமலூரில் இருந்து சேலம் வரையிலான 19 கி.மீ. சாலையை மட் டுமே பயன்படுத்தினாலும், வாகன உரிமையாளர்கள் மொத்தம் 79 கிலோமீட்டருக்கு சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும். இது நியாயமற் றது மற்றும் நிதி நெருக்கடியாகும். இதற்கு முந்தைய ஒன்றிய, மாநில அரசுகளும், அதிகாரிகளும் மக்கள் நலன் கருதி இப்பிரச்னைக்கு தீர்வு காணத்தவறியது மிகவும் வருத்த மளிக்கிறது. தற்போது ஓமலூர் எம்விஆர் சுங்கச்சாவடியில் பல்வேறு வகை யான வாகனங்களுக்கு பல்வேறு தொகைகள் வசூலிக்கப்படுவதால், தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் வாக னப் பயன்பாட்டுக் கட்டணங்கள் அதி கரித்து வருவது வாகனப் பயனாளர் களை கடுமையாக பாதித்துள்ளது. இதன் விளைவாக, சரக்கு வாகனங் களுக்கான வாடகை செலவும் அதிக ரித்து, இறுதியில் பொதுமக்களால் சுமக்கப்படுகிறது. எனவே, ஓமலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். மேலும், தும்பிப்பாடியில் இருந்து சேலம் வரையிலான சுமார் 19 கி.மீ தூரத்திற்கு பராமரிப்புக் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை தேசிய நெடுஞ் சாலைத்துறை ஆணையம் ஏற்க வேண்டும். இவ்வாறு அதில் வலியு றுத்தப்பட்டுள்ளது.