திருப்பூர், பிப்.25– வீட்டுமனைப் பட்டாக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம், உப் புப்பாளையம் பகுதி மக்கள் மனு அளித்தனர். வெள்ளகோவில் பகுதியில் சொந்த வீடு இருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட 20 இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் ரத்து செய்யப் பட்டது. அந்த மனைகளை தகுதி யுள்ள, சொந்த வீடு இல்லாத நபர் களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா வெள்ளியன்று காங்கயம் வட்டாட்சியர் கனி மொழியிடம் அளித்த மனுவில் கூறி யுள்ளதாவது, திருப்பூர் மாவட் டம், காங்கயம் தாலுகா, வெள்ள கோவில் ஒன்றியம், உப்புப்பாளை யம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை யின் சார்பில் 61 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங் கப்பட்டது. இந்த 61 பேரில், வெள்ளகோவில் பகுதியில் சொந்த வீட்டில் குடியிருப்பவர்க ளுக்கும் பட்டா வழங்கப்பட்டதாக கூறி, உப்புப்பாளையம் கிழக்கு மற்றும் அதற்கு அருகே உள்ள குட்டக்காட்டுப் புதூர் ஆகிய பகுதி யில் வசிக்கும் சொந்த வீடு இல் லாத மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடு பட்டனர். மேலும், இது குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என வும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு அப்போதைய ஆதி திராவிடர் நலத்துறை காங்கயம் தனி வட்டாட்சியர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, 61 பட்டாக் களில் 20 நபர்கள் சொந்தமாக வீடு வைத்திருந்ததும், போலியான ஆவணங்கள் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றதும் தெரியவந்தது. இதன் பின்னர், அந்த 20 பேரின் பட்டாக்களும் ரத்து செய்யப்பட்டது. அதேநே ரம், ரத்து செய்யப்பட்ட 20 வீட்டு மனைப் பட்டாக்களை சொந்த வீடு இல்லாமல், வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த உப்புப்பா ளையம் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த 13 வரு டங்களாக வழங்காமல் அதிகாரி கள் தாமதித்து வருகின்றனர். இதற்கிடையே மேற்கண்ட காலியிடத்தின் அருகே உள்ள வேலம்பாளையம், காட்டுப் பாளையம் பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், மேற்கண்ட இடத்தை ஆக்கிரமித்து, குடிசை களை அமைத்துள்ளனர். எனவே, காங்கயம் வட்டாட்சியர் இப்பிரச்ச னையில் நேரடியாக விசாரணை நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, காலியாக உள்ள 20 வீட்டு மனைப் பட்டாக்களை உப்புப் பாளையம் கிழக்கு மற்றும் அதற்கு அருகே உள்ள குட்டக்காட்டுப் புதூர் ஆகிய பகுதியில் வசிக்கும் சொந்த வீடு இல்லாத பட்டியலின மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனு வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.