நாமக்கல், மார்ச் 18- ஆனங்கூர் அருகே 24 மணி நேர மும் செயல்படும் அரசு மதுபானக்கடை மற்றும் மதுக்கூடத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி அப் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், மனுக்கள் அளிக்கும் புகார் பெட்டியில் ஆனங்கூர் பகுதி பொது மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, திருச்செங்கோடு தாலுகா, ஆனங் கூர் அருகே உள்ள தேவனாங்குறிச்சி, தோக்கவாடி சாலையில், அரசு மதுபா னக்கடை எண்:6002 செயல்பட்டு வருகி றது. இப்பகுதியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. பள்ளி குழந் தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பல ரும் அத்தியாவசிய தேவைகளுக்கு இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வரு கின்றனர். இந்நிலையில், இந்த அரசு மதுபானக்கடைக்கு வருபவர்கள் மது அருந்திவிட்டு, காலி பாட்டில்களை சாலையோரங்களில் ஆங்காங்கே வீசி உடைத்து எறிவதும், சாலையோரங்க ளில் கூட்டமாக அமர்ந்து மது குடிப்பதை யும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும், போதையில் அவ்வழியே செல்லும் பொதுமக்களையும் குறிப் பாக பெண்களையும் தகாத வார்த்தை களால் வசைப்பாடுகின்றனர். இதுகுறித்து மதுக்கூடத்தை நடத்தும் உரிமையாளர் மாதேஸ்வரனி டம், முறையிட்டால்அவர் குண்டர்களை வைத்து மிரட்டுகிறார். மேலும், 24 மணி நேரமும் இந்த மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்க ளுக்கு பிரச்சனையாக இருக்கும் அரசு மதுபானக்கடையை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நிரந்தரமாக மூட வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.