districts

img

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஆட்சியரிடம் மனு

தருமபுரி, பிப்.12- தண்டேகுப்பம் கிராமத்திற்கு குடி நீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி  அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங் களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கும்மனூர் ஊராட்சி, தண்டே குப்பம் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தில் உள்ள ஒருவரின் பட்டா நிலத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் போர் வெல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நபர் தண்ணீர் தர மறுத்து வருகி றார். தண்ணீர் கிடைக்காததால், குளிக் காகாமலேயே குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நிலைமை உள்ளது. மேலும், குடிநீருக்காக விவசாய கிணறுகளுக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இப் பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, போர்வெல் மூலம் குடிநீர் பிடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்த னர். முன்னதாக, அப்பகுதி பொதுமக் கள் காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலு வலகத்திற்கு வந்தது குறிப்பிடத்தக் கது.