திருப்பூர், டிச.20- பொங்குபாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் அநா கரிகமாக நடந்து கொண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. திருப்பூர் ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சியில் கடந்த 16 ஆம் தேதி சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாய தொழிலாளர் சங்கத்தின் வடக்கு ஒன்றிய பொருளாளர் கிருஷ் ணசாமி 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது உட்பட பல்வேறு பிரச்சனைகளை குறித்து கேள்வி எழுப்பினார். பொறுப்பு அதி காரிகள் முறையாக விளக்கம் கொடுக்க முற்பட்ட போது அவர் களை இடைமறித்த சுந்தரமூர்த்தி, பாரதி குமார் ஆகியோர் கிருஷ்ணசாமியை முற்றுகையிட்டு எப்படி நீ பேசலாம் என்று தகராறு செய்தனர். இந்த நபர்கள் கிராமசபை கூட்டத்தில் மக்கள் எழுப்பு கின்ற கேள்விகளுக்கு அதிகாரிகளை பதிலளிக்க விடாமல், இவர்கள் பேசி குழப்பத்தை ஏற்படுத்து கிறார்கள். இனி வரும் கிராம சபை கூட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக் காமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட் டுள்ளது. இதில் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், வள் ளிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன், விவசாய சங்கத்தின் வடக்கு ஒன்றிய செயலா ளர் சுப்பிரமணியம், பொருளாளர் கிருஷ்ணசாமி மற்றும் நிர் வாகிகள் நாகராஜ், தனபால், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.