கோவை, ஆக.8- பரிதாபங்கள் யுடியூப் சேனல் கோபி, சுதா கருக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத் தினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் வெள்ளியன்று மனு அளித்தனர். பரிதாபங்கள் என்ற யுடியூப் சேனலில் அண்மையில் வெளியான “சொசைட்டி பாவங்கள்” என்ற வீடியோவிற்கு பல்வேறு சாதிய கட்சியினர், அமைப்புகள் கண்டனங் களை தெரிவித்து வருகின்றனர். வியாழ னன்று கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ஒரு வரும் அந்த வீடியோவில் உள்ள கோபி, சுதா கர், டேவிட் ஆகிய மூன்று பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த வீடி யோவை உடனடியாக நீக்கி அந்த சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளார். மேலும் கோபி, சுதா கருக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் கோபி, சுதாகர் ஆகிய இருவருக்கும் தமிழக அரசு உரிய பாது காப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத் தில் திவிக மாநகர தலைவர் நிர்மல் குமார் தலைமையில் மனு அளித்தனர். இதுகுறித்து திராவிடர் விடுதலை கழக நிர் வாகிகள் கூறுகையில், கோபி, சுதாகர் வெளி யிட்ட அந்த வீடியோவில் எந்த ஒரு சாதியின ரையும் குறிப்பிடவில்லை. ஆனால் சாதிய வெறி பிடித்தவர்கள் கோபி, சுதாகரை மிரட்டி உள்ளனர். தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் எம் ஆர் ராதா அந்த காலத்தில் எவ்வாறு சாதிகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினாரோ அது போன்று தற்பொழுது கோபி, சுதாகர் இருவ ரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே தமிழக அரசு இருவருக்கும் எம் ஆர் ராதா என்ற ஒரு விருதை உருவாக்கி அதனை வழங்க வேண்டும் என தெரிவித் தார்.