districts

img

ஒகேனக்கல் குடிநீர் கேட்டு ஆட்சியரிடம் மனு

தருமபுரி, ஜூலை 23- மோளையானூர் அடுக்குமாடி குடி யிருப்புக்கு ஒகேனக்கல் குடிநீர் விநியோ கம் செய்ய வேண்டும் எனக்கோரி திங்களன்று மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி யிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். அம்மனுவில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளை யானூரில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட  மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக் கும் வீடு திட்டத்தின் கீழ் 192 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட் டப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியி ருப்புக்கு ஆரம்பத்தில் இருந்தே குடி நீர் சரியாக விநியோகம் செய்யப்பட வில்லை. வாரத்திற்கு இரண்டு நாட் கள் மட்டுமே குடிநீர் வருகிறது. ஆரம் பக்காலம் முதல் குடிநீர் பற்றாக் குறையை அதிகாரிகளிடம் பொதுமக் கள் தெரிவித்துள்ளனர். ஆனால், எந்த வித நடவடிக்கையும் இல்லை. தொடர் பற்றாக்குறையினால் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள் ளப்பட்டுள்ளனர். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் இப்பகுதி மக்கள் குடிநீருக் காக பெருமளவில் செலவழிக்க வேண் டிய சூழல் உள்ளது. எனவே, நாள்தோ றும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும், என அப்ப குதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர்.