districts

img

இலவச மனைப்பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு

தருமபுரி, ஜூன் 13- திருநங்கைகள் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள்  இலவச வீட்டுமனை பட்டா  கேட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர்.  தருமபுரி மாவட்டம், அரூர், அச்சல்வாடி ஊராட் சியில் திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த  திருநங்கைகள் குழுவாக ஒன்று கூடி வாடகை வீட்டில்  குடியிருந்து வருகின்றனர். குடும்பத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட இவர் களுக்கு சொந்த வீடு இல்லை. வாடகை வீட்டில் வசிக்கலாம் என்று முடிவெடுத் தாலும் இவர்களுக்கு வாடகை வீடு கொடுக்க தயங்குகிறார்கள். எனவே, இலவச வீட்டு மனைபட்டா வழங்கி, குடியிருப்பு கட்டி தரு மாறு திருநங்கைகள் மனு அளித்தனர்.  இதே போன்று பென்னாகரம் வட்டம், போடூர் கிராமத்தில், ஆதிதிராவிடர் மக்கள்,  வீடு இல்லாமல் வாடகை வீட்டில் பலர்  வசித்து வருகின்றனர். ஏற்கனவே இப்பகுதி யில் சிலருக்கு மட்டும் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. வீட்டுமனை பட்டா இல் லாதவர்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத் தனர். ஆனால் மனுவின் மீது எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே வழங்கியுள்ள அதே பகுதியில், மீதமுள்ள  இடத்தில், இலவச மனைபட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.