districts

img

அடிப்படை வசதிகள் கேட்டு கோவை ஆட்சியரிடம் மனு

கோவை, ஜூலை 4- பாப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கணபதி மாநகர் மற்றும் சரவணா கார்டன் பகுதியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்‌ இதுகுறித்து, சூலூரை அடுத்த பாப்பம்பட்டி ஊராட்சிக்குட்ட பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, கணபதி மாநகர் மற்றும் சரவணா கார்டன் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம்.. எங்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, தார்ச்சாலை மற்றும் வடிகால் வசதி இல்லததால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். தெருவிளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் தேவைகளுக்காக எங்கும் செல்ல முடியாத பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகிறோம்.  வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு இன்றளவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. 5 பொதுக்குடிநீர் குழாய் மட்டுமே உள்ளது. இது எங்கள் தேவைக்கு போதுமனதாக இல்லை. மேலும், எங்கள் நகரின் மிக அருகாமையில் பொது குப்பைக்கிடங்கு உள்ளதால், சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு 

இதேபோன்று மதுக்கரை மார்க்கெட் பகுதியில் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், மதுக்கரை மார்கெட் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு மதுபானக்கடை அமைப்பதற்கு முயற்சி நடைபெறுகிறது. அருகாமையில் அரசு மருத்துவமனை உள்ளது. மேலும் வெள்ளிக்கிழமைகளில் வாரச்சந்தை கூடுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடுவார்கள். இந்நிலையில், இங்கு அரசு மதுபானக்கடை அமைந்தால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும். எனவே, இப்பகுதியில் அமையவிருக்கும் மதுபான கடையை திறக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.