districts

img

மாணவர்களை இழிவாக நடத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மனு

ஈரோடு, மார்ச் 28-  ஈரோட்டில் பள்ளி மாணவர்களை இழி வாக நடத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது.  இந்திய மாணவர் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் செ.நவீன் குமார் தலைமையில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் வி.ஏ.விஸ் வநாதன், மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் எம்.திவாகர் உள்பட டி.நவீன்,  சதீஷ்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், முள்ளம்பட்டி கிரா மத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அருந்ததி யர் சமூகத்தைச் சார்ந்த மாணவ, மாண வர்களை சாதி ரீதியாக இழிவுபடுத்தி கழி வறை சுத்தம் செய்ய நிர்பந்தித்த ஆசிரியர் கள் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண் டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளையும் ஆய்வு செய்து தூய்மைப் பணியாளர் காலிப்பணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ் வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தது.