districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சமுதாய நலக்கூடம் அமைக்க வாலிபர் சங்கத்தினர் மனு 

திருப்பூர், அக்.18 - உடுமலை ஒன்றியம் ஜல்லிப்பட்டி கிராமத்தில் சமுதாய  நலக்கூடம் அமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளித் தனர்.  உடுமலை ஒன்றியம், ஜல்லிப்பட்டி ஊராட்சியில் 500க்கும்  மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு  சமுதாய நலக் கூடம் அமைக்க வேண்டும் என்று இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உடுமலை வட்டார  வளர்ச்சி அலுவலகத்திலும் மற்றும் பலமுறை கிராம சபை  கூட்டங்களிலும் வலியுறுத்தி மனு அளித்திருந்தனர்.  தற்போது சமுதாய நலக்கூடம் அமைத்திட ஏற்பாடு  நடைபெறுவதாக தெரிய வருகிறது. எனவே, ஜல்லிபட்டியில்  போக்குவரத்து வசதி உள்ள, மக்கள் பயன்படுத்த வசதி  உள்ள மையமான பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைத்துக்  கொடுக்க வேண்டும் என உடுமலை வட்டார வளர்ச்சி அலு வலர் சுப்பிரமணி, உடுமலை ஊராட்சி ஒன்றியத் தலைவர் மகாலட்சுமி முருகன் ஆகியோரிடம் மனு அளித்தனர்.  இந்த மனு கொடுக்கும் இயக்கத்தில் வாலிபர் சங்க ஒன்றி யக்குழு உறுப்பினர் சி.மாசாணி, அஜித் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  20 ஆண்டு கடுங்காவல் 

திருப்பூர், அக்.18 – சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 20  ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், குண்டடம், பொட்டிக்காம்பாளை யத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (34). கட்டிட மேஸ்திரி. இவரிடம் சித்தாள் வேலைக்கு பெண் ஒருவர் வேலை செய்து  வந்தார். உடல்நலக் குறைவாக இருந்ததால், அவரின் 15 வயது மகளை சுப்பிரமணி சித்தாள் வேலைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று அழைத்து சென் றுள்ளார். ஆனால் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வெளி யூர் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத் துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில்  தாராபுரம் மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத் தனர். சிறுமியை மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட  மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு  தரப்பில் வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார். செவ்வாயன்று நீதிபதி பாலு தீர்ப்பு கூறினார்.  போக்சோ குற்றத்துக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், கடத்திச்சென்ற குற்றத் துக்காக 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000  அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனையை ஏக காலத்தில் சுப்பிரமணி அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.

கோவில் உண்டியலை தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சி வைரல்

திருப்பூர், அக்.18 - திருப்பூர் அருகே கோவிலில் உண்டியலை திருட வந்தவர்,  உண்டியலை உடைக்க முடியாமல் அதனை, தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வைரலா கியுள்ளது.  திருப்பூர், போயம்பாளையம் அருகே குருவாயூரப்பன் நகர், ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் கோவில் உள்ளது. திங்களன்று இங்குள்ள உண்டி யலில் பணம் திருட வந்த நபர் ஒருவர் உண்டியலை தூக்கிப்  பார்த்தும், டேபிள் மீதிருந்த தீர்த்தக் கரண்டியை எடுத்து  உண்டியல் உள்ளே போட்டும் எவ்வளவு பணம் இருக்கிறது  என பார்க்க முயற்சித்துள்ளார். தொடர்ந்து உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர் அதிலிருந்த பணத்தை எடுத்து கொண்டு அருகில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில்  வீசி சென்று உள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி  சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. இந்த சம்பவம் குறித்து  புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

3 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

கோபிசெட்டிபாளைம், அக்.18- இருசக்கர வாகனத்தில் 3 கிலோ கஞ்சாவை விற்பனை  கொண்டு சென்ற 3 பேரை காவல் துறையினர் கைது செய் தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள விராலிமேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக கோபி மதுவிலக்கு அமலாக்கபிரிவினர், அவ் வழியாக எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை  சோதனை மேற்கொண்டதில், கவுந்தபாடியைச் சேர்ந்த சுரேஷ், தர்மராஜ் ஆகியோரிடம் ஒரு கிலோ 700 கிராமும்,  ரகுமானிடம் ஒரு கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் காவல் துறையினர் கைது  செய்து, சிறையில் அடைத்தனர்.

பேக்கரியில் சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு, அக்.18- நசியனூர் அருகே பேக்கரியில் சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அக்கடையில் உணவு  பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம், நசியனூர் பகுதியைச் சேர்ந்த பெண், அவரது குழந்தை மற்றும் உறவினர் ஆகிய மூவர், செவ்வாயன்று  ஈரோடு வந்துவிட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள ஒரு பேக்கரி யில் முட்டை பப்ஸ் மற்றும் கேக் ஆகியவற்றை சாப்பிட்டுள்ள னர். இதன்பின் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே மூன்று  பேருக்கும் வயிற்றுவலி, வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டுள் ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அங்குள்ள தனியார்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு. மேல்சிகிச்சைக் காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள னர். இந்நிலையில், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் தங்க விக்னேஷ் உத்தரவின்பேரில் அருண் குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரி யில் புதனன்று காலை சோதனை மேற்கொண்டனர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களின் மாதிரி களை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மறுஅனுமதி வரும் வரை வேறு எந்த உணவு பொருட்களையும் தயாரிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும், சிகிச்சையில் அனு மதிக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் நடந்த விபரங்கள் குறித்து  கேட்டறிந்தனர். பேக்கரியில் சேகரிக்கப்பட்ட உணவு பொருட் கள் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என அதிகாரி கள் தெரிவித்தனர்.