districts

img

மாற்று இடம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை மனு

ஈரோடு, ஜன.31- புறம்போக்கு பகுதியில் வசிக்கும் குடும்பங்களை அகற்றும் பட்சத்தில், அவர்களுக்கு மாற்று இடம் வழங் கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்தியூர் வட்டம், கெட்டிசமுத்திரம் கிராமம், கிருஷ்ணா புரத்தில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசிக்கும் 13 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களை அகற்ற அரசு அதிகரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, மேற்கண்ட குடும்பத்தினரை அகற்றும் பட்சத்தில் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கிட வேண்டும். அது வரை அவர்களை வெளியேற்றும் முயற்சி மற்றும் வீடு களின் மின் இணைப்புகளை துண்டிக்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி திங்களன்று அந்தியூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். இதில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜயராகவன், தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, கிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் டி.மாரியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.