மணல் குவாரிகளை திறக்கக்கோரி மணல் லாரி உரிமையாளர்கள் மனு
சேலம், மார்ச் 20- தமிழகம் முழுவதும் உடனடியாக 50 மணல் குவாரி களை தமிழக அரசு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையா ளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையா ளர் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ள புகார் பெட்டியில் செலுத்திய மனு குறித்து கூறு கையில், எம்-சாண்ட் கிரஷர் உரிமையாளர்கள், எம்சாண்ட் பீ - சாணட் ஜல்லி பொருட்களின் விலையை கடந்த மூன்று மாதங்களில் ஒரு யூனிட்டுக்கு 2000 ரூபாய் உயர்த்தி யுள்ளனர். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவ தும் உடனடியாக 50 மணல் குவாரிகளை தமிழ்நாடு அரசு திறக்க வேண்டும். மணல் விலையையும், எம்-சாண்ட் விலை யையும் குறைக்க வேண்டும். ஏற்கெனவே மார்ச் 10 ஆம் தேதி இதே கோரிக்கையை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. உடனடியாக இதுகுறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் மீது வழக்கு
பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் மீது வழக்கு கோவை,மார்ச் 20- பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆட்டோ ஒட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைம றைவானவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை பேரூர் அருகே குனியமுத்தூர் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரும ணம் நடைபெற்றது. அந்த பெண் ஒரு ஜவுளிக் கடை யில் ஊழியராக வேலை செய்து வந்தார். திருமணம் முடிந்த தும் கணவருடன் தனி குடித்தனம் நடத்தி வருகிறார். இந்நிலை யில் இளம் பெண்ணுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்ட தால் வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் தனியாக இருந்தார். அப்பொழுது அதே பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் அத்து மீறி வீட்டுக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அப்பெண் சத்தம் போட்டதை கேட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர்கள் திரண்டுள்ளனர். இதனைக்கண்ட ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து, தனது கணவ ருக்கு நடந்த விவரங்களை இப்பெண் தெரிவித்து உள் ளார். கணவர் ஆட்டோ டிரைவரை சந்தித்து கேள்வி எழுப்பி யபோது, மிரட்டல் விடுத்து விட்டு கற்களை எடுத்து வீசி விட்டு தப்பிச் சென்றார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர்.
வெறிநாய்கள் கடித்து 27 ஆடுகள் பலி
நாமக்கல், மார்ச் 20- சேந்தமங்கலம் அருகே வெறிநாய்கள் கடித்து 27 ஆடு கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், அக்கி யம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (48). விவசா யியான இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில், மேய்ச்சலுக்கு பின்பு சுமார் 30க்கும் மேற்பட்ட ஆடுகளை தோட்டத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து விட்டு, வீட்டிற்கு சென்று விட் டார். இதைத்தொடர்ந்து செவ்வாயன்று காலை சென்று பார்த்தபோது, 27 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தன. அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் நள் ளிரவு நேரத்தில் பட்டிக்குள் புகுந்து கடித்து குதறியதில் ஆடுகள் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறையினருக்கு கருப்பண்ணன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அங்கு வந்த மருத்துவக்கு ழுவினர் காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சையளித்தனர். வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது அதிகரித்து வரு கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் நாய்களை கட்டுப்ப டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்களின் இனப்பெ ருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். நாய் கடித்து இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெருவிளக்கை சீரமைத்து தரக் கோரிக்கை
தெருவிளக்கை சீரமைத்து தரக் கோரிக்கை நாமக்கல், மார்ச் 20- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள காவிரி ஆர் எஸ் பகுதியில் ரயில்வே ஜங்ஷன் பகுதி உள் ளது. இந்நிலையில், ரயில்வே நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரிவ தில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் அவ் வழியே செல்லும் பெண்கள், குழந்தைகள் அச்சத்துக்குள் ளாகி வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த மின் விளக்கை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து பலமுறை ரயில்வே நிர்வாகத்திற்கு தெரி வித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால் விரை வில் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ள னர்.
ஏற்காடு மலைப்பாதையில் பற்றி எரியும் தீ 3 நாட்களாக அணைக்க முடியாமல் திணறல்
சேலம், மார்ச் 20- ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 3 நாட் களாக தீ பற்றி எரிந்து வருவதால், வனத்துறை யினர் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வெயி லின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள மரங்க ளில் இலைகள் காய்ந்துள்ளது. கடந்த 15 நாட்களாக ஏற்காட்டில் உள்ள வனப்பகு திகளில் ஆங்காங்கே காட்டு தீ ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் ஏற்காடு மலைப்பாதையில் கருங் காலி கிராமம் வனப்பகுதியில் மரங்கள் தீ பிடித்து எரியத்தொடங்கியது. மூங்கில் மரங் கள் காய்ந்து கிடந்ததால் தீ மளமளவென பரவியது. இதனால் வனப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காட்டுத்தீ அதிகரித்ததால் சுமார் 50 ஏக்கர் நிலத்தில் உள்ள மரம், செடி, கொடிகள் தீக்கிரையாகின. இதுகுறித்த தகவல றிந்து வந்த வனத்துறையினர் மற்றும் தீய ணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருந்த போதிலும் நடு வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயை அணைக்க முடியவில்லை. தீ மீண்டும் சாலையோரத்தில் உள்ள வனப்பகுதியில் உள்ள மரங்களை பற்றி ஏறிய தொடங்கி யுள்ளது. இதனால் மலைப்பகுதியில் மீண்டும் தீ கொழுந்து விட்டு எரிந்து வரு கிறது. தீயணைப்பு வாகனம் செல்ல முடியா ததால் காட்டு தீயை அணைக்க முடியாத தால் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை கோவை, மார்ச் 20- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்தி ரன் (54). இவர் மனைவி விசித்ரா (46), மகள்கள் ஸ்ரீநிதி (25), ஜெயநிதி (14). இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணி ரைஸ்மில் என்ற பெயரில் அரிசி மில் ஒன்றை செல்வபுரம் பகுதி யில் நடத்தி வந்தார். இந்த ரைஸ் மில்லில் சுமார் 18 கோடி ரூபாய் அளவிற்கு கடன் ஏற்பட்டது. இருப்பினும் கடனை அடைத்து சமீபத்தில் மீண்டுள்ளார் ராமச்சந்திரன். தற்போது மது பாட்டில்களுக்கு பயன்படுத்தப்படும் மூடிகளை தயா ரிக்கும் நிறுவனம் ஒன்றை, ரைஸ் மில் இருந்த வளாகத்தி லேயே நடத்தி வருகிறார். இந்த வளாகத்திலேயே அவர்களது வீடும் அமைந்துள்ளது. மகள் ஸ்ரீநிதி கனடாவில் பட்டப் படிப்பு பயின்று வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீநிதி வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில், செவ்வாயன்று இரவு வழக்கம் போல் நால்வரும் தூங்கச் சென்றபோது, வீட்டில் பணிபுரியும் பெண் பணியாளரை நாளை வேலைக்கு வர வேண்டாம் என ராமச் சந்திரன் கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதனன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்களது வீடும் கதவு திறக்கப் படவில்லை. இதையடுத்து ராமச்சந்திரனின் சகோதரி வழக் கம்போல் அவர்களை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள் ளார். அப்போது வீட்டில் உள்ள அறை ஒன்றில் 4 பேரும் மயக்கமாகிக் கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நால்வரையும் பரி சோதித்த போது, நால்வரும் உயிரிழந்திருந்தது தெரியவந் தது. விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் நால்வரது உடல் களையும் மீட்டுள்ள போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லை காரணமாக நால்வரும் உயிரிழந்தார்களா அல் லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக, போலீ சார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், மார்ச் 20- பிரதமர் நரேந்திர மோடி மீது சேலத்தில் புகார்
பிரதமர் நரேந்திர மோடி சேலம் மாவட் டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதற்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் வந்திறங்கி னார். அவரது வாகனத்துக்கு முன்பாகவும், பின்பாகவும் இரண்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பிற்கு வந் தன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களை தேர்தல் பிரச்சாரத் திற்கு பயன்படுத்தியது சட்டப்படி குற்றமா கும். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை வரும், அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தி அம்மையார் கடந்த 1975 ஆம் ஆண் டில் நடந்த ஒரு தேர்தலின் போது நடந்த பிரச்சாரத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர ரைப் பயன்படுத்தியதால், தேர்தல் ஆணை யத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தேர்தல் ஆணைய உத்திரவின்படி, எந்தவொரு தலைவரும், பிரதமர் அல்லது முதல்வர் கூட பிரச்சார நோக்கங்களுக் காக அரசாங்க இயந்திரத்தைப் பயன் படுத்தக்கூடாது என்பது விதி. தேர்தல் விதி அமலுக்கு வந்த பிறகு சேலம் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயரின் அதிகாரப் பூர்வ வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டன. அதே விதி பிரதமருக்கும் பொருந்தும் என்று எண்ணுகிறோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கொடுக்கப்படும் இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.வி.செந்தில், காங்கிரஸ் மாணவர் மாவட்டத் தலைவர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
ரூ.12 லட்சம் பறிமுதல்
ரூ.12 லட்சம் பறிமுதல் தருமபுரி, மார்ச் 20- தருமபுரி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.12,27,790 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல் லம்பள்ளி வட்டம், சேசம் பட்டி பிரிவு சாலை அரு கில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது, உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.11 லட்சத்து 58 ஆயிரத்து 50யை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். இதே போல், தொப்பூர் சோத னைச்சாவடியில் நிலை யான கண்காணிப்பு படை யினரால் ரூ.69 ஆயிரத்து 740 பறிமுதல் செய்யப்பட் டது. இதைத்தொடர்ந்து மொத்தம் ரூ.12 லட்சத்து 27 ஆயிரத்து 790 தரும புரி சார்நிலை கருவூல அலுவலகத்தில் ஒப்ப டைக்கப்பட்டது.