districts

img

ரயில்வே கோட்ட மேலாளரிடம் அமைச்சர், எம்பிக்கள் மனு

ஈரோடு, நவ.26- ஈரோடு, சாஸ்திரி நகர் மக்கள்  நலன் காக்கும் வகையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் எம்பிக் கள் சேலம் ரயில்வே கோட்ட மேலா ளரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சாஸ்திரி நகர் பொதுமக்களின் வீடு களை காலிசெய்ய வேண்டுமென ரயில்வே நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து அம் மக்களை வெளியேறுமாறு நிர் பந்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து இப்பகுதி மக்கள்  அமைச்சர் மற்றும் மேயர் ஆகி யோரை சந்தித்து முறையிட்டனர். அவர்களும் வீடுகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கையளித்தனர். இந்நிலையில், வருவாய்த் துறையி னர் சர்வே பணிகளை மேற்கொண் டனர்.  இதற்கிடையில், சேலம் ரயில்வே  கோட்ட மேலாளர் கௌதம் சீனி வாசனிடம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச் சர் சு.முத்துசாமி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வ ராஜ் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி கோரிக்கை மனு அளித்தனர்.  

இதனைத் தொடர்ந்து அமைச் சர் சு.முத்துசாமி தெரிவிக்கையில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சாஸ்திரி நகர் பகுதியில் 1978ஆம்  ஆண்டு முதல் சுமார் 45 ஆண்டு கள் 515 குடும்பங்களைச் சார்ந்த  சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட் டவர்கள் வசித்து வருகின்றனர். இது ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடமாகும்.  இப்பகுதியில் அனைத்து மதத் தினருக்கான வழிபாட்டுத் தலங் கள், நியாய விலைக்கடைகள், வணிக வளாகங்கள் உட்பட பல் வேறு கடைகள் செயல்பட்டு வரு கின்றன. இரயில்வே நிர்வாகத் தினர் மேற்கண்ட பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் தங்களது வீடு களை காலி செய்ய வேண்டுமென  அறிவிப்பிணை  (நோட்டீஸ்) வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நானும், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுமக்கள் வசிக்கும் இடத்தைக் காலிசெய்ய வலியுறுத்தியதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை மனுக்களை அளித்திருந்தோம். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சேலம் ரயில்வே கோட் டத்திற்கு கோப்புகளை அனுப்பி உள்ளார்.  சாஸ்திரி நகர் பொதுமக்கள் தங்களது வீடுகளை காலி செய்யும் பட்சத்தில் தொழில் ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிப்படைவார்கள். எனவே, இந்த இடத்திற்கான மதிப்பீட்டுத் தொகையினையும் வழங்குவதற்கு தயாராக உள் ளனர். இவர்களின் வாழ்வாதா ரத்தினை கருத்தில்கொண்டு வீடு களை காலி செய்யும் நடவடிக்கை யினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சேலம் இரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளிக் கப்பட்டது. முன்னதாக, ஒன்றிய ரயில்வே அமைச்சரை மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகி யோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களையும் அளித்துள்ளனர். மேலும், இது போன்ற இடங் களில் குடியிருப்பவர்களை பாது காப்பதில் நமக்கு முழு பங்கு உள்ளது என தெரிவித்தார்.