districts

img

பட்டா நிலத்தை அளவீடு செய்து தர: சிஐடியு மனு

மேட்டுப்பாளையம், ஜூன் 25- அரசால் வழங்கப்பட்ட பட்டா இடத்தை அளவீடு செய்து தரக் கோரி மேட்டுப்பாளையத்தில் செவ்வாயன்று நடைபெற்ற ஜமாபந்தியில் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகு தியில் வீட்டுமனை இல்லாத ஏழை எளிய  மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு வீட்டு மனை இடம் வேண்டி கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இருப்பி னும் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இந்நிலையில், தற்போதைய திமுக அரசின் மக்களைத் தேடி முதல் வர் திட்டத்திலும், முதல்வரின் தனிப்பிரி வுக்கும் கோரிக்கை வைத்தனர். இதன்  அடிப்படையில், கடந்த 14.02.2024 அன்று மேட்டுப்பாளையம் வட்டாட்சிய ரால் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஏழை  எளிய மக்களுக்கு புலா எண். 940/  மற்றும் 939/1B என்ற அரசு புறம்போக்கு  இடத்தை இலவச வீட்டு மனை பட்டா வாக வழங்கப்பட்டது. பட்டா வழங்கிய பிறகு தேர்தல் நடை முறை அமலுக்கு வந்ததால் மேற்படி இடத்தை அளவீடு செய்து தரவில்லை. எனவே, மேற்படி இடத்தை அளவீடு  செய்து பட்டா வழங்கிய பயனாளிக ளுக்கு ஒதுக்கீடு செய்து தர வேண்டும்  என செவ்வாயன்று வட்டாச்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ் வில், சிஐடியு மேட்டுப்பாளையம் தாலூகா பொதுத் தொழிலாளர் சங்கம்  சார்பில் அதிகாரிகளிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தனர்.