நாமக்கல், ஜூலை 8- எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை கிராமம், எளையம்பாளையத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் அருகில் கோழிப்பண்ணை அமைப்பதை கைவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். எளையாம்பாளையத்தில் சோமசுந்தரம் என்பவர் அவரது நிலத்தில் சுமார் ஒரு லட்சம் கோழிகள் கொண்ட கோழி பண்ணை அமைக் கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இப் பகுதியில் கோழி பண்ணை அமைவதால் ஈக் கள் தொல்லை, துர்நாற்றம், கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கும், கோழி கழுவியிலி ருந்து வெளியேறும் புழுக்கள் மற்றும் புழுதி களால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே அரு காமையில் உள்ள கல்குவாரி மற்றும் கிர ஷர்கள் மூலம் காற்று மாசுபடுதல், கால் நடைகள் உயிரிழப்புகள், குடிநீர் மாசுபாடு, குடிநீர் பற்றாகுறை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக இப்பகுதியில் கோழிப்பண்ணை அமைப்பது பெரும் சுகா தார சீர்கேடு ஏற்படுத்தும். எனவே கோழிப் பண்ணைகள் அமைக்க கூடாது என பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் ஒருபகு தியாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வெள்ளியன்று நூற்றுக்கு மேற் பட்டோர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவசுப்பிரமணியனி டம் கோரிக்கை மனு அளித்தனர்.