districts

img

பராமரிப்பு இன்றி காணப்படும் பெருமாநல்லூர் கால்நடை மருத்துவமனை

திருப்பூர், ஜன.23- பெருமாநல்லூர் கால்நடை மருத் துவமனை பராமரிப்பு இன்றி உள்ள தாகவும், மருத்துவமனை வளாகத் திற்குள் மது பாட்டில்கள் உடைக்கட் பட்டு கிடப்பது உட்பட பல்வேறு பிரச் சனைகள் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பெருமாநல்லூர், ஈட்டிவீராம்பா ளையம், வள்ளிபுரம், பட்டம்பாளை யம், சொக்கனூர், மேற்குபதி, தொரவலூர், காளிப்பாளையம், கணக்கம்பாளையம் ஆகிய பஞ்சா யத்திற்கு உட்பட்ட மக்களின் பிரதான  தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு. இப்பகுதியில் உள்ள முக்கிய கால்நடை மருத்து வமனை பெருமாநல்லூரில் அமைந் துள்ளது. இந்நிலையில் இம்மருத்து வமனை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக விவசாயி கள் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து விவசாயிகள்  மேலும் கூறுகையில், சில பகுதிக ளில் கால்நடை கிளை மருத்துவம னைகள் இருந்தாலும், 10 பஞ்சா யத்து மக்களும் வந்து செல்லும்  முக்கிய கால்நடை மருத்துவ மனை பெருமாநல்லூர் மருத்து வமனை. இப்பகுதிகளில் பிரதான தொழிலே விவசாயம் மற்றும் கால்  நடை வளர்ப்பு தான் இந்நிலை யில், மருத்துவமனை கவனிப் பாரற்று இருக்கிறது. சுற்றுச் சுவர்  இல்லாமல் உள்ளதால் மருத்துவ மனை வளாகத்திற்குள் மது பாட்டில் கள் உடைக்கப்பட்டு கிடக்கிறது. மேலும், பல அறைகள் பயன்படுத்தப் படாமல் விட்டதால் இடியும் நிலை யில் உள்ளது. இதனால் கால்நடை களை மருத்துவமனைக்கு எடுத்து  வரும் கால்நடை விவசாயிக ளுக்கு பெரும் சிரமமாக உள்ளது.  கோடை காலம் வர உள்ளதால் கால்ந டைகளுக்கான மருத்துவ பராம ரிப்பு அவசியமாக உள்ளது. ஆடுகள், மாடுகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் உட் பட அனைத்து உயிரினங்களுக்கும் மருத்துவ பராமரிப்பு அவசியமாக உள்ளது.  எனவே மருத்துவமனை யில் தினசரி மருத்துவர் வருவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கால்நடை மருத்துவமனை முறை யாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கால்நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.