கோவை, செப்.21- பல்வேறு கொலை குற்ற வழக்குகள் நிலுவை யிலுள்ள நபரை, கோவை யில் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கோவை மாவட்டம், காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில், காவலர் குடும்பத்தினருக்கு நடைபெற்ற யோகா பயிற்சி நிறைவு விழா சனியன்று நடைபெற்றது. இந்த நிறைவு விழா வில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதன்பின் அவர் செய்தியாளர்களை சந் தித்தார். அப்போது, சனியன்று காலை கொடிசியா மைதானத் தில் குற்றவாளி ஒருவர் சுட்டுப்பிடிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, சுட்டுப்பிடிக்கப்பட்ட ஆல்வின் என்பவர் கன்னி யாகுமரியில் சரித்திர பதிவேடு குற்றவாளி. அவர் மீது 3 கொலை, 2 கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவை யில் உள்ளன. மேலும், அவர் மீது ஜாமீனில் வெளிவர முடி யாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஆல் வினை பல்வேறு இடங்களில் மூன்று, நான்கு மாதங்களாக தனிப்படை தேடி வந்தனர். இந்நிலையில், சனியன்று அதி காலை கிடைத்த தகவலின் அடிப்படையில், கொடிசியா பகுதி யில் அவரை காவலர்கள் பிடிக்க முற்பட்டனர். அப்போது ஆல் வின், ராஜ்குமார் என்ற காவலரை கத்தியால் தாக்கியதால் தற் காப்புக்காக ஆல்வின் சுடப்பட்டார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்குகளில் முறையாக நீதிமன்றங்களில் ஆஜராகாதவர் கள் குறித்தும் கண்காணித்து வருகிறோம். காவலர்கள் துப் பாக்கி எடுத்து செல்லுவது எங்களுடைய பணியில் ஒரு பகுதி. துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத் தில் யாரும் எடுத்து செல்வதில்லை. ஆனால், காவலரின் உயி ருக்கு ஆபத்து வரும்போது அதை பயன்படுத்தும் கட்டா யம் ஏற்படுகிறது, என்றார்.