districts

img

பெரியார் பல்கலைக்கழக முறைகேடு: அரசு குழு விசாரணை

சேலம், ஜன.31- சேலம் பெரியார் பல்கலைக்கழ கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை குழு திங்களன்று பல்க லைக்கழகத்தில் விசாரணையை துவங்கியது. சேலம் பெரியார் பல்கலைக்கழ கத்தில் பணி நியமனத்தில், பணியா ளர்கள் அதிகாரிகள் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் என அனைத்து மட் டத்திலும் ஊழல் நடைபெற்று உள் ளது என தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. மேலும் உடற் கல்வி இயக்குனர் நியமனத்தில் பல் கலைக்கழக மானியக் குழு வழி காட்டு நெறிமுறைகள் பின்பற்றா தது பல்கலைக்கழக நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவி கள் இட ஒதுக்கீடு ஆணைப்படி நிய மிக்காதது தமிழ் துறை தலைவர் பெரியசாமி நியமனத்தில் நடை பெற்ற முறைகேடுகள் பெரியசாமி கொடுத்துள்ள போலிச் சான்று தகுதி யின்மை ஆகியவற்றை குறித்து அர சுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த முறைகேடுகள் குறித்து  உரிய விசாரணை நடத்த உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் அர சாணை வெளியிட்டிருந்தார். இத னைத்தொடர்ந்து உயர்கல்வித்துறை  கூடுதல் செயலாளர் பழனிச்சாமி அரசு இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட குழு சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் விசாரணையை துவங்கி யது. தொடர்ந்து இரண்டு மாத காலம் விசாரணை நடத்தி விசாரணை குழு வின் அறிக்கையை அரசுக்கு சமர்ப் பிக்க உள்ளனர் தொடர்ந்து பெரி யார் பல்கலைக்கழக ஆவணங் களை விசாரணைக் குழுவினர் சரி பார்த்து வருகின்றனர்.