சேலம், செப்.15- கேள்வி கேட்பவர்களால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டே இருக்கிறது. எல்லாவற்றிற்கும் அடிப் படை கேள்வி கேட்பதுதான் என பெரி யார் பல்கலையில் நடைபெற்ற விழா வில் கல்வியாளர்கள், அறிஞர்கள் உரையாற்றினர். சேலம் பெரியார் பல்கலைக்கழ கத்தில் தந்தை பெரியார் இருக்கை, பேரறிஞர் அண்ணா இருக்கை, முத் தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையம் சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள், சமூகநீதி நாள், பல்கலைக்கழக 27 ஆவது ஆண்டு நிறுவன நாள் விழா வெள்ளியன்று நடைபெற்றது. பதி வாளர் கே.தங்கவேல் வரவேற்றார். இவ்விழாவிற்கு தலைமை வகித்து துணைவேந்தர் இரா.ஜெகநாதன் பேசு கையில், 27 ஆவது ஆண்டில் பெரி யார் பல்கலைக்கழகம் அடியெடுத்து வைக்கிறது. பெரியார் பல்கலைக்கழ கத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையத்திற்கான பிரத்யேக கட்டடம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். திராவிட இலக் கியம் மற்றும் இதழியல் என்ற தலைப் பில் முதுநிலை பட்டயப்படிப்பு, அடுத்த கல்வியாண்டிலிருந்து தொடங்கப் படும். தமிழ் அல்லது இதழியலில் இளநிலை பாடம் படித்தவர்களும், இதேதுறையில் முதுநிலை பாடங் கள் பயின்று வருபவர்கள் இதில் சேர்ந்து பயிலலாம். இதேபோன்று திராவிட இலக்கியம் மற்றும் இதழி யல் என்ற தலைப்பில் பகுதி நேர முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு தொடங்கப்படும். இதில் பணியிலி ருக்கும் பத்திரிக்கையாளர்கள் பங் கேற்கலாம், என்றார்.
இதன்பின் “கல்வியின் கலங் கரை விளக்கம்” என்ற தலைப்பில் சுவீ டன் நாட்டு அறிவியல் ஆராய்ச்சியா ளர் விஜய் அசோகன் பேசுகையில், அண்ணாவின் சிந்தனை ஆச்சரியத் திற்குரியது. அண்ணாவை அரசியல் வாதியாக மட்டும் பார்க்கக்கூடாது. அவர் மிகச்சிறந்த சிந்தனைவாதி; கொள்கைவாதி. கடைசி வரை பெரி யாரை மட்டுமே தலைவராகக் கொண்டு செயல்பட்டார். எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளை வழங்கும் வகையி லான செயல்பாடுகளை அண்ணா உருவாக்கினார். மக்களுக்குத் தேவை யானவற்றை செய்வதற்கு அதிகாரம் தேவை என அண்ணா நினைத்தார். இதில் மட்டுமே பெரியாருடன் அவர் முரண்பட்டார், என்றார். இதைத்தொடர்ந்து “அரிதினும் அரிது கேள்” என்ற தலைப்பில் தஞ் சைத் தமிழ் பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் ம.இராசேந்தி ரன் பேசுகையில், இரண்டரை ஆண்டு மட்டுமே பள்ளிக்கு சென்றவரின் பெயரில் பல்கலைக்கழகம் இயங்கு வது அவரின் மதிப்பை தெளிவாக்கு கிறது. பெரியாரின் போக்கை பிடிக் காமல் அவரது தந்தை, சொத்துக் களை அறக்கட்டளைக்கு எழுதி வைத்துவிட்டார். தந்தையால் புறக் கணிக்கப்பட்ட பெரியாரை, தந்தை என்று சமூகம் அழைக்கும் அளவுக்கு அவர் இருக்கிறார். ஆசிரியர்கள் மாணவர்களை வளர்க்கிறார்கள். மாணவர்கள் ஆசிரியர்களை வளர்க் கிறார்கள். எல்லாவற்றிற்கும் அடிப் படை கேள்வி கேட்பதுதான். கேள்வி கேட்பவர்களால்தான் இந்த உலகம் இயங்கி வருகிறது. நான் யார்? என் பது பெயரில் இல்லை. யாராக இருக் கிறீர்கள் என்பதில் இருக்கிறது. டிஜிட் டல் உலகில் செயற்கை விஷயங்கள் அதிகரித்து வருகின்றன. இயந்திரங் களுடன் இணைந்து வேலை செய்த காலம், இயந்திரம் தனித்து இயங்கிய காலம், நம்முடைய வேலையை இயந் திரங்கள் செய்ய கற்றுக்கொடுத்த காலம் போய், மனிதர்களுக்கு இயந் திரங்கள் கற்றுக் கொடுக்கும் காலம் வந்து விட்டது. என்னைப் போன்று இயந்திரம் செய்யும் நிலையில், நான் யார் என்ற கேள்வி அவசியமானதாக மாறிவிடு கிறது. இணையவாசிகளாக அதிகம் இருக்கும் இளைஞர்கள், உரிய வழி காட்டுதலை பெரியாரிடம் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். கேட்ட துக்கு அதிகமான தகவல் கிடைக்கும் காலத்தில், அரிதானவற்றை கேட்க இளைஞர்கள் தயாராக வேண்டும். எதை கேட்டாலும் அறிவியல்பூர்வ மாக இருந்தால் மட்டுமே நம்ப வேண் டும் என்ற பெரியாரின் வழியில் இளை ஞர்கள் செயல்பட வேண்டும், என் றார்.