ஈரோடு, செப். 1- சனாதன ஒழிப்பு மாநாட்டையொட்டி, சனாதன எதிர்ப்புப் போராளி தந்தை பெரியார் சுடரேந்தும் நிகழ்வு, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை முன்பு நடைபெற்றது. நிகழ்விற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் மு.சங்கரன் தலைமை தாங்கினார். தந்தை பெரியார் சிலைக்கு தமுஎகச மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.தங்கவேல் மாலை அணிவித்தார். தந்தை பெரியார் சுடர் மாவட்டச் செயலர் கலைக்கோவனால் செல்வி கனிஷ்காவுக்கு வழங்கப்பட்டது. அப்போது சனாதன எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டப் பொருளாளர் கி.கணேசன் சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் எழுத்தாளர் கதை சொல்லி சரிதா ஜோ நன்றி கூறினார்.