தஞ்சாவூர், நவ.12- தஞ்சாவூர் மாவட்ட அளவிலான தடகளப் போட்டி, அண்மையில் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த 600-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில், பேராவூரணி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவியரசன் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும், சஞ்சய் குமார் உயரம் தாண்டுதல் போட்டியிலும் முதலிடம் பெற்றனர். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவியரசன், ராஜ கவிதன், தினேஷ் குமார், தினகரன் ஆகியோர் 4400 மீட்டர் அஞ்சல் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், மாணவர் சேக் முகமது மைதீன் (11 ஆம் வகுப்பு) சைக்கிள் பந்தயத்தி லும், கவியரசன் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும், ராஜ கவிதன் 3000 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் 2 ஆம் இடம் பெற்றனர். இதன் மூலம் மாநில அளவிலான போட்டிக்கு இம்மாணவர்கள் 6 பேர் தகுதி பெற்றனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களை சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, பள்ளித் தலைமை ஆசிரியர் அ.கருணாநிதி, உதவித் தலைமை ஆசிரியர் கே.சோழபாண்டியன், பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் வி.ஏ.டி.சுந்தரராசன், பொருளாளர் ஆர்.பி.ராஜேந்திரன், துணைத் தலைவர்கள் எம்.சுந்தர்ராஜன், தெட்சிணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது உடற்கல்வி ஆசிரியர்கள் எம்.சோலை, முத்துராமலிங்கம் உடனிருந்தனர்.