கோவை, பிப்.4- மதுக்கரை நகராட்சியில் சேக ரிக்கப்படும் குப்பைகள், பயன்படுத் தாத கல்குவாரியில் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள் ளன. கோவை மாவட்டம், மதுக்கரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந் நிலையில், 27 வார்டுகளிலும் சேக ரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும், 23 ஆவது வார்டு சல்காரா ஹோட்டல் பின்புறமுள்ள பயன்பாடற்ற கல் குவாரியில் கொட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு 13 டன் குப்பைகள் சேக ரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகின் றன. ஒரு டன் குப்பைக்கு 5565 ரூபாய் ஒப்பந்ததாரருக்கு நகராட்சி மூலம் வழங்கப்படுகிறது. 23 ஆவது வார் டில் ராஜேஸ்வரி நகர், ஸ்ரீ என்கிளேவ், பாலு என்கிளேவ், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். இந்நிலையில், கல்குவாரியில் கொட்டப்படும் குப்பைகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் இரவு நேரங்களில் தீ வைத்து செல் கின்றனர். இதனால், தீ கொளுந்து விட்டு எரிவதுமட்டுமின்றி, காற்றும் மாசடைகிறது. தொடர்ந்து, அரு காமை குடியிருப்பு வாசிகள் மூச் சுத்திணறல், சுவாச கோளாறுகள், இரவு நேர தூக்கமின்மை போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகுகின்ற னர். சில நேரங்களில் தீயணைப்பு துறையின் உதவியை நாட வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், குப்பை களை எரிப்பதால் குடிநீர் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இது சம்மந்த மாக நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும், செவி சாய்க்கா மல் இருந்து வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டுமென, அப் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.