districts

கல்குவாரியை மூடக்கோரிய பேச்சுவார்த்தையை புறக்கணித்த மக்கள்

தருமபுரி, டிச.7- பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலு வலகத்தில் கல்குவாரி உரிமையா ளர்களுக்கும், பொதுமக்களுக்குமான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய் யப்பட்ட நிலையில், குவாரி உரிமை யாளர்களுக்கு சாதகமாக அதிகாரி கள் செயல்படுவதாக குற்றம்சாட்டி கிராம மக்கள் கூட்டத்தை புறக் கணித்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட் டிப்பட்டி தாலுகா தென்கரைகோட்டை அருகே வடகரை, கோபிசெட்டி பாளையம் டி.துறிஞ்சி அள்ளி, அய் யப்பன் நகர், மங்காநேரி, தட்சானூர் மேடு என  6 கிராமங்களில் சுமார், 10  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் விவசா யத்தை நம்பி வாழ்கின்றனர்.  இந்நி லையில், விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தென்கரைக் கோட்டை அருகே உள்ள  வடகரை யில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு, பத்து ஏக்கர் பரப் பளவில் பெரும் ஆழத்தில் கற்கள்  எடுக்கப்பட்டுள்ளது. இதனால் காற்று, தண்ணீர் ,ஒலி, மாசு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் மட்டும் பாதிக்கப்பட்டு விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக் காத சூழல் ஏற்பட்டு உள்ளது. குவாரி களுக்கு வந்து செல்லும் வாகனங்க ளால் சாலைகள் பாதிப்படைந்து வரு கின்றன. இதனால் குடிநீர் பிரச்சனை  விவசாய நிலத்திற்கு நீர் எடுப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. குவாரியில் பாறைகள் வெடிவைத்து தகர்க்கும் போது அருகில் உள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் கட்டிடங்கள் விரிசல் ஏற்படுகிறது.  எனவே, கல்குவாரி உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்து வேண்டும்  என இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனைத்தொடர்ந்து, பாப்பி ரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத் தில் கல்குவாரி உரிமையாளர்களுக் கும் பொதுமக்களுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை  நடத்த ஏற் பாடு செய்யப்பட்டது. இதில், வட்டாட் சியர் தலைமையில் பாப்பிரெட்டி பட்டி காவல் ஆய்வாளர் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத் தில், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலு வலர்கள், குவாரி உரிமையாளர்கள் யாரும் வரவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் பேச்சு வார்த்தையை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.