கோவை, ஜூலை 7- கோவை கள்ளிப்பாளையம் பஞ்சாயத் திற்கு உட்பட்ட பகுதியில் 3 ஆண்டுகளாக குடி நீர் இணைப்பு கிடைப்பதில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த மக்கள் வியாழனன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பாளையம் பஞ்சாயத்து ராயல் என் கிளேவ்-ல் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்ற னர். இந்நிலையில், தங்கள் குடியிருப்பு அமைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகி யும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் வியாழனன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் வங்கிக் கடன் பெற்று இங்கு வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். மூன்று ஆண்டுகளாகியும் எங்க ளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட வில்லை. இதுகுறித்து பலமுறை பஞ்சாயத் தில் மனு அளித்துள்ளோம். எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை. இதனால் மாதந் தோறும் 3 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து லாரி தண்ணீர் வாங்கி உபயோகிக்கிறோம். ஏற்கனவே வங்கி கடனில் தவிக்கும் எங்க ளுக்கு இது மேலும் சுமையாக உள்ளது. உட னடியாக எங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.