தருமபுரி, ஏப்.20- தருமபுரி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அருகே ஒரு மாதமாக 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் பிளாஸ்டிக் நிறைந்த குப்பைகளால் மக்கள் அவதிக்குள்ளாக்கின்றனர். தருமபுரி மாவட்டம், தடங்கம் அருகே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியா ளர் அலுவலகம் செயல்பட்டு வருகி றது. இப்பகுதிக்கு அருகிலேயே இலக் கியம்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வாகனங் கள் மூலம் கொண்டு வந்து ஒரே இடத் தில் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்காக அமைக்கப்பட்டுள்ளது. அருகாமையில் குடியிருப்புகள் குறைவாக இருந்தா லும் தனியார் கல்லூரிகள் வனப்பகுதி மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் இதனை ஒட்டியே அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த குப்பைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் வைத்த தீயின் காரணமாக கடந்த ஒரு மாதமாக இந்த குப்பைக் கிடங்கில் இருக்கின்ற பிளாஸ்டிக்குகள் குப்பைகள் உள்ளிட் டவை அனைத்தும் சேர்ந்து தொடர்ந்து எரிந்து வருகிறது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் செயல்படும் பகுதியிலேயே 24 மணி நேரமும் பிளாஸ் டிக் உள்ளிட்ட குப்பைகள் எரிந்து கடு மையான காற்று மாசு ஏற்பட்டு வரு கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு தகவல் அளித்தும் இத னால் வரை குப்பை கிடங்கை அப்புறப் படுத்தாமல் ஒரு மாதமாக எரியும் தீயை அணைக்காமலும் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பழைய தேசிய நெடுஞ்சாலை பகுதி முழுவதும் புகையுடன் கூடிய துர்நாற்றம் வீசி வருகிறது. புகைமூட் டத்தால் குழந்தைகள் முதல் முதிய வர்கள் வரை மூச்சுவிட சிரமப்படுகின்ற னர். எனவே, இப்பகுதியில் குப்பைக்கு வைக்கப்பட்டுள்ள தீயை அணைத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.