districts

img

சாலைப்பணியை தொடரக்கோரி மக்கள் மறியல்

சேலம், பிப்.9- எடப்பாடி அருகே புதிய சாலை அமைக் கும் பணிக்கு எதிர்ப்புத்தெரிவித்து நில உரி மையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், சாலை அமைக்கும் பணியைத் தொடர வேண்டும் எனக்கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியத் திற்குட்பட்ட தாதாபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வரு கிறது. பிரதான சாலையில் இருந்து இந்த மருத்துவமனைக்கு செல்லும் வகையில் புதிய சாலை அமைக்க சட்டப்பேரவை உறுப் பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அண்மை யில் ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து புதிய சாலை அமைக்கும் பணி நடைபெறும் நிலையில், அப்பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்த சிலர், சாலை அமைக் கும் இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி மறியலில் ஈடுபட்டனர். இதனால், சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனிடையே மருத்துவமனைக்கு செல் லும் சாலையை விரைந்து அமைக்க வேண் டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை  மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவ லறிந்து வந்த எடப்பாடி ஒன்றிய துணை  வட்டார வளர்ச்சி அலுவலர் வேல்முருகன், காவல் துறையினர் போராட்டக்காரர்களி டையே பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.