districts

பழைய சாலையின் மீது புதிய சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு

தருமபுரி, அக்.15- தருமபுரி அருகே பழைய சாலை யின் மீது புதிய சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி - திருவண்ணாமலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிர மாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக ரூ.313.50 கோடி மதிப் பீட்டில் தருமபுரி - அரூர் (மொரப்பூர் வழி) சாலை வரை இருவழிப்பாதை யிலிருந்து 4 வழிப்பாதையாக அகலப் படுத்தி மேம்பாடு செய்தல், ரூ.96.50 கோடியில் அரூர் வழி தாணிப்பாடி -  திருவண்ணாமலை சாலை வரை இரு வழிப்பாதையிலிருந்து 4 வழிப்பாதை யாக அகலப்படுத்தி மேம்பாடு செய் தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. தருமபுரி - திருவண்ணா மலை 113 கிலோ மீட்டர் தூரமாகும். இதில் தருமபுரி மாவட்டத்தில் மட் டும் 73 கிலோ மீட்டர் தூரம் இந்த  சாலை அமைக்கப்படுகிறது. இதற் காக ஏற்கெனவே தருமபுாி, கோபி நாதம்பட்டி, செம்மண்அள்ளி, மொரப் பூர் பகுதிகளில் மரங்கள் அகற்றப் பட்டு, பணிகள் நடைபெற்று வரு கின்றன. இதில் தற்போது சாலையின் அகலம் 7 மீட்டராக உள்ளது. இது  16.20 மீட்டர் அகலமுள்ள 4 வழிச் சாலையாக மாற்றப்பட்டு. இச்சாலை யில் தருமபுரி - அரூர் வழி மொரப்பூர் சாலையில் 70 சிறுபாலங்கள் கட்டப் பட்டு, சாலை அமைக்கப்பட்டு, முடி யும் பெறும் நிலையில் உள்ளது. 4 வழிச்சாலைகளை தரமான  சாலையாக அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஒப்பந்தங்கள் விடப்பட்டு, எட்டு ஒப்பந்ததாரர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனிடையே, ஒப்பந்த தாரர்கள் பழைய தார்ச்சாலையை அகற்றாமல் பழைய தார்ச்சாலை யின் மீது தார்க்கலவை கொட்டி சாலை அமைக்கும் பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இப்படி சாலை அமைப்பதால், வருங்காலங்களில் அந்த சாலையை தரமான சாலை யாக இல்லாமல் பழைய சாலையாக மாறும் நிலை ஏற்படும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சமூக ஆர் வலர்கள் குற்றச்சாட்டினர். இந்நிலை யில், அரூர் அருகே உள்ள சேவா  கிராம பகுதியில் பழைய சாலையை  அகற்றாமல் பழைய சாலையின் மீது புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி யில் ஈடுபட்டிருந்தனர். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் பழைய தார்ச் சாலையை அகற்றிவிட்டு புதிய தார்ச் சாலையை அமைக்க வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை  அமைக்கும் பணியை தடுத்து நிறுத் தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த  அரூர் வட்டாட்சியர் பெருமாள் போராட் டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டார். அப்போது, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என வட்டாச்சியர் உறுதி யளித்தார். அதனையேற்று பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென் றனர்.